உயரம் தாண்டுதல் போட்டியில் மாரியப்பன் தங்கவேலு, சரத்குமார் இருவரும் பதக்கத்தை உறுதி செய்தனர். மாரியப்பன் தங்கவேலு 1.86 மீட்டர் உயரம் தாண்டி முதலிடத்தில் உள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இதுவரை இந்திய வீரர் வீராங்கனைகள் 2 தங்கம் உட்பட 8 பதக்கங்களை வென்றுள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியா 5 பதக்கங்களை வென்றிருந்தது. அதில் 2 தங்கங்களும் அடக்கம்.
டோக்கியோ பாராலிம்பிக் ஆடவர் உயரம் தாண்டுதல் டி(63) போட்டி இன்று (ஆகஸ்ட் 31), இந்திய நேரப்படி மாலை 3.55 மணிக்கு தொடங்கியது. இந்த உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, சரத்குமார், வருண் சிங் ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்நிலையில், உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, சரத்குமார் இருவரும் பதக்கத்தை உறுதி செய்தனர். மாரியப்பன் தங்கவேலு 1.86 மீட்டர் உயரம் தாண்டி முதலிடத்தில் உள்ளார்.
மாரியப்பன் தங்கவேலு கடந்த 2016 ரியோ பாராலிம்பிக்கிலும் உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்றிருந்தார். அதில், 1.89 மீட்டருக்கு உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…