மாண்டஸ் புயல் பாதிப்பு.! திருப்பதி கோவில் வளாகத்தில் வெள்ளப்பெருக்கு..! தடைபட்ட தரிசனம்..!

திருப்பதி கோவில் வளாகத்தில் வெள்ளப் பெருக்கால் தண்ணீர் தேங்கியுள்ளதால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.

வங்கக்கடலில் புதிதாக உருவாகி தற்போது கரையை கடந்துள்ள மாண்டஸ் புயலின் தாக்கத்தால் ஆந்திர மாநிலம் திருமலையில் உள்ள திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலில் (நேற்று) வெள்ளிக்கிழமை கனமழை பெய்துள்ளது. இதனால் கோவில் வளாகத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த வெள்ளப்பெருக்கால் கோவில் வளாகத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. தேங்கியுள்ள தண்ணீர் காரணமாக முதியவர்கள் உட்பட பக்தர்கள் தங்களது பயணங்களில் சிரமங்களை எதிர்கொண்டனர், மழையின் காரணமாக தரிசனம் தடைபட்டது. தற்பொழுது திருமலை திருப்பதியின் தேவஸ்தான துப்புரவு பணியாளர்கள் மழைநீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Comment