நடுரோட்டில் வெறிச்செயல்..கத்தியால் குத்தி கொல்லப்பட்ட வழக்கறிஞர்..! 2 பேர் கைது

நடுரோட்டில் வழக்கறிஞரை கத்தியால் குத்தி கொலை செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். 

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் வழக்கறிஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜோத்பூரில் ஜுக்ராஜ் சவுகான் என்ற வழக்கறிஞர் மாலை 6 மணியளவில் தனது பைக்கில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது நடு ரோட்டில் அடையாளம் தெரியாத இரண்டு பேர் அவரை வழி மறைத்து கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.

திடீரென தாக்கியவர்களில் ஒருவர் கத்தியை எடுத்து அவரது மார்பில் குத்தியதில் கீழே விழுந்துள்ளார். இதனால் காயமடைந்த சவுகான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வழக்கறிஞர் சவுகானை கத்தியால் குத்தி கொலை செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனில் மற்றும் முகேஷ் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை, குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாக போலீசாரை மேலும் கூறினர்.

Recent Posts

IPL2024: மழை காரணமாக இன்றைய போட்டி கைவிடப்பட்டது..!

IPL2024: மழை காரணமாக ராஜஸ்தான், கொல்கத்தா அணி மோதவிருந்த போட்டி கைவிடப்பட்டது. நடப்பு ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியும், கொல்கத்தா அணியும் குவஹாத்தியில்…

8 hours ago

பஞ்சாபை பந்தாடி 2-வது இடத்திற்கு முன்னேறியது ஹைதராபாத் அணி ..! 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில்  ஹைதராபாத் அணி பஞ்சாப் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற 69-வது ஐபிஎல் போட்டியில்…

12 hours ago

5ஆம் கட்ட மக்களவை தேர்தல்… 8 மாநிலங்கள், 49 தொகுதிகள்…

சென்னை: மக்களவை தேர்தல் 5ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. நாட்டில் உள்ள 543 தொகுதிகளுக்குமான நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை 4 கட்ட வாக்குபதிவு நடைபெற்று…

15 hours ago

விடுதலை 2 படத்தில் கேமியோவில் மிரட்ட வரும் வில்லன் நடிகர்! யார் தெரியுமா?

சென்னை: வெற்றிமாறனின் 'விடுதலை பாகம் 2' படக்குழுவில் நடிப்பு அரக்கன் என்று அழைக்கப்படும் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளதாக தகவல். இயக்குனர் வெற்றிமாறனின் நீண்ட கால இயக்கத்தில் இருந்து வரும்…

16 hours ago

அதிக சிக்ஸர்,அதிக ரன் யாரெல்லாம்? வாங்க டி20 உலகக்கோப்பை சாதனையை திரும்பி பார்ப்போம்!

சென்னை : டி20 உலகக்கோப்பை போட்டியில் அதிகம் சிக்ஸர்கள் விளாசிய வீரர், அதிவேகமாக சதம் விளாசிய வீரர் சாதனைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு (2024)  டி20…

19 hours ago

உயிருடன் புதைக்கப்பட்ட முதியவர் 4 நாட்கள் கழித்து மீட்பு.!

சென்னை: மால்டோவாவில் நான்கு நாட்களுக்கு முன், புதைக்கப்பட்டிருந்த ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 74 வயது ஒரு மூதாட்டியின் மரணம் தொடர்பான விசாரணையின் போது,…

19 hours ago