மதுராந்தகம் சாலை விபத்து – நிவாரணம் அறிவித்த முதல்வர்..!

முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுராந்தகம் சாலை விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி அறிவிப்பு. 

நேற்று மகாதீபம் முடிந்து திரும்பி வருகையில் மதுராந்தகம் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது அங்கு சென்ற கண்டெய்னர் லாரி மீது டாடா ஏஸ் வாகனம் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

டாடா ஏஸில் பயணித்த சந்திரசேகர், சசிகுமார், தம, ஏழுமலை, சேகர், கோகுல் எனும் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுராந்தகம் சாலை விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி அறிவித்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

Leave a Comment