சீட்பெல்ட் சிக்கலால் கார்களை திரும்ப பெறுகிறது மாருதி நிறுவனம்.! வெளியான ஷாக்கிங் தகவல்.

மாருதி நிறுவனம் தயாரித்த கார்களில் சில சிக்கல் இருப்பதாகவும் இதனால்  9,125 கார்களை திரும்ப பெறுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நவம்பர் 2ம் தேதி முதல் 28ம் தேதி வரை தயாரிக்கப்பட்ட 9,125 வாகனங்களை திரும்பப் பெறுவதாக மாருதி சுசுகி அறிவித்துள்ளது. இதில் சியாஸ், பிரெஸ்ஸா, எர்டிகா, எக்ஸ்எல்6 மற்றும் கிராண்ட் விட்டாரா ஆகிய மாடல் கார்களில் சிக்கல் இருப்பதாகவும் மாருதி தெரிவித்துள்ளது.

இதுவரை தயாரிக்கப்பட்ட கார்களில் முன் வரிசை இருக்கை சீட்பெல்ட்களின் தோள்பட்டை உயரத்தை சரிசெய்யும் பாகங்களில் குறைபாடு இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குழந்தைகளுக்கு சீட் பெல்ட் அணியும் போது வேலை செய்யாமல் போகவும், பயணிக்கும் போது சீட் பெல்ட் எளிதில் கழன்று விடவும் வாய்ப்பு உள்ளது.

வாடிக்கையாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சந்தேகத்திற்குரிய வாகனங்களை ஆய்வு செய்ய உள்ளதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. காரில் சிக்கல் இருந்தால் பழுதடைந்த பகுதியை இலவசமாக மாற்றி தர முடிவு செய்திருப்பதாகவும் மாருதி நிறுவனம் அறிவித்துள்ளது.

மாருதி சுசுகியின் அங்கீகரிக்கப்பட்ட ஷோரூம்களில் இருந்து சிக்கல் உள்ள கார் உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு அவர்களின் வாகனம் சோதனை செய்யப்பட்ட பின் சிக்கல் இருந்தால் அது சரி செய்யப்படும் என்று மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment