போதைப்பொருள் கடத்தல் வழக்கு – ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ்!

Jaffer Sadiq : ஜாபர் சாதிக் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு ‘லுக் அவுட்’ நோட்டீஸ் அனுப்பியுள்ளது மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ளதாக கூறப்படும் அரசியல் சார்ந்தவரும், சினிமா திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விமான நிலையங்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

Read More – பொதுத்தேர்வுக்காக அமைச்சர் தங்கம் தென்னரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

சமீபத்தில் டெல்லியில் சுமார் ரூ.2,000 மதிப்புள்ள போதைப்பொருள் பிடிபட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் போதைப்பொருள் கடத்தலில் சிக்கிய கும்பலுடன், திமுகவின் ஜாபர் சாதிக்கின் தொடர்பு பெரிதளவு இருப்பது விசாரணையில் தெரியவந்ததாக தகவல் வெளியானது.

Read More – இதுதான் நிபந்தனை… பணிப்பெண் விவகாரத்தில் திமுக எம்எல்ஏ மகன் மருமகளுக்கு ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம்.!

இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், திமுக அயலக அணியில் பொறுப்பில் இருந்த ஜாபர் சாதிக் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனிடையே, போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக டெல்லி அலுவலகத்தில் ஆஜராக ஜாபர் சாதிக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

ஆனால், ஆஜராகாமல் அவர் தலைமறைவானார். பின்னர் அவரது வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த போதைப்பொரு கடத்தல் வழக்கில் இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கை பிடிக்க மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Read More – ஓபிஎஸ்-க்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கை விசாரிக்க தடையில்லை – உச்சநீதிமன்றம்

இந்த நிலையில், ஜாபர் சாதிக் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க தற்போது லுக்கவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே, சமீபத்தில் டெல்லியில் கைலாஷ் பார்க் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.2,000 மதிப்பிலான போதைப் பொருட்கள் பிடிபட்டது. இதுதொடர்பாக தமிழகத்தை சேர்ந்த முகேஷ், முஜிபுர் மற்றும் அசோக்குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

தொடர் மழை…நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை!

சென்னை : நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்…

9 mins ago

சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் பலி!

சென்னை: ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து 8 பேர்உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப்…

11 mins ago

வீட்டுக்குள் செடி வளர்க்கிறீர்களா? அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

Plant-வீட்டிற்குள் எந்தெந்த செடிகளை வளர்க்கலாம் என்றும் அதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். தற்போது மாறி வரும் நவீன உலகில் காடுகள் ,வயல்வெளிகள் இருக்கும்…

47 mins ago

ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய போட்டி !! 4- வதாக பிளேஆப் முன்னேற போகும் அணி எது ?

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி சென்னை அணியை வீழ்த்தி பிரம்மாண்ட வெற்றியை பெற்று பிளே ஆப் செல்லுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்து…

3 hours ago

IPL2024: மும்பையை வீழ்த்தி ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த லக்னோ..!

IPL2024: மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டைகள் இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இதனால் லக்னோ அணி18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

9 hours ago

லாவோஸ், கம்போடியாவில் வேலை மோசடி… வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை..!

லாவோஸ், கம்போடியா ஆகிய நாட்டிற்கு செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை தேடி லாவோஸ் மற்றும் கம்போடியாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு…

12 hours ago