Vijay [File Image]
சென்னை : நடந்து முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய், தொகுதி வாரியாக’தளபதி விஜய் கல்வி விருது’ வழங்கும் விழாவில் ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வருகிறார்.
இந்த விழா சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்று வருகிறது. விழாவில் கலந்துகொண்டபோது மேடையில் பேசிய த.வெ.க தலைவர் விஜய் மாணவர்களுக்கு அட்வைஸ் ஒன்றையும் கொடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர் “நிறைய சோசியல் மீடியா சேனல்கள் நல்லது கேட்டது என்று கருத்து கேட்பார்கள். அதில் எல்லாம் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் ரொம்பவே சுலபமாக நல்லதை கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும், நல்லவர்களை கெட்டவர்களாகவும், கெட்டவர்களை நல்லவர்களாகவும் காட்டுவார்கள்.
இதனை நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம் நீங்கள் எல்லாமே பாருங்கள், எல்லாமே படிங்கள் ஆனால், உண்மை எது பொய் எது என்பதை எப்படி தெரிந்துகொள்வது என்பதை கற்றுக்கொள்ளுங்கள். அப்போது தான் நம்மளுடைய நாட்டில் என்ன பிரச்சனை, நம்மளுடைய நாட்டின் மக்களுக்கு என்ன பிரச்சனை என சமூகத்தின் தீமைகள் பற்றி தெரியவரும்.
அது தெரிந்துகொண்டால் ஒரு சில அரசியல் கட்சிகள் செய்யும் பொய்யான பிரச்சாரங்களை நம்பாமல் எது சரி..எது தப்பு என்பதை சரியாக தெரிந்து கொண்டு நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க கூடிய, ஒரு விசாலமான பார்வையை வளர்த்துக்கொள்ள முடியும். அது மட்டும் வந்துவிட்டது என்றாலே, அதைவிட சிறந்த அரசியல் வேறு எதுவுமே இருக்க முடியாது. அதைவிட நம்மளுடைய நாட்டின் வளர்ச்சிக்கு நீங்கள் செய்யப்போற இந்த பங்களிப்பு வேறு எதுவுமே இருக்க முடியாது” எனவும் விஜய் தெரிவித்துள்ளார்.
டெல்லி: 3 நாள் பயணமாக ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இன்று பிற்பகல் ரஷ்யா சென்றடைய உள்ளார். பிரதமர் மோடி இன்று…
சென்னை: சென்னை மாநகர் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகர காவல் ஆணையராக…
தனுஷ் : சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் பற்றி வதந்தியான விஷயங்கள் பரவுவது என்பது புதிதான விஷயம் இல்லை. அப்படி வதந்தியான தகவல்கள் பரவும்போது அதற்கு பிரபலங்கள் சூசகமாக…
கள்ளக்குறிச்சி : தமிழக வெற்றி கழகத்தின் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளரும் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவருமான பரணி பாலாஜி என்பவரின் இல்ல மஞ்சள் நீராட்டு விழாவிற்கு வருகை தந்த தவெக…
டெல்லி: ஜாமீனில் வெளியே வந்தவரை கூகுள் மேப் உதவியுடன் இருப்பிடத்தை தொடர கூடாது என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் வழக்கில்…
அபிஷேக் சர்மா : நேற்று நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா 46 பந்துக்கு சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். இந்த போட்டி முடிந்த பிறகு…