நமது வீடுகளில் தினமும் காலையிலும், மாலையிலும் தேநீர் குடிப்பது வழக்கம். இதில் சிலைக்கு டீ பிடிக்கும். சிலருக்கு காபி பிடிக்கும். எனவே டீயை தயாரிப்பதற்கு தேயிலையை வாங்கி பாட்டிலில் சேகரித்து வைப்பது போல, காபி தயாரிக்க காப்பி தூளையும் வாங்கி சேகரித்து வைப்பதுண்டு. ஆனால், இந்த காப்பித்தூள் சில நாட்களில் கட்டிபட்டு போய்விடும். தற்போது இந்த பதிவில், கட்டிபட்ட காபித்தூளை தூக்கி எறியாமல், எப்படி உபயோகமுள்ளதாக மாற்றலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
காபி தூள் கட்டிப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
காப்பி தூளை தினமும் காப்பி குடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் மட்டுமே பாட்டிலில் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். எப்போதாவது சில நேரங்களில் காப்பி குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் சிறிய காபித்தூள் பாக்கெட்டை வாங்கி பயன்படுத்தலாம். அவ்வாறு பயன்படுத்தும் காப்பித்தூள் பாக்கெட்டில் மீதம் காப்பித்தூள் இருந்தால் அதனை நன்றாக சுருட்டி, ரப்பர் பேண்ட் போட்டு வைத்தால் காப்பித்தூள் கட்டி ஆகாது.
எவர்சில்வர் அல்லது பிளாஸ்டிக் டப்பாவில் கொட்டி வைத்தால் சீக்கிரமாகவே கட்டியாகி விடும். கண்ணாடி பாட்டிலில் கொட்டி வைத்தால் மட்டுமே நீண்ட நாட்களுக்கு கட்டி படாமல் வாசனை போகாமல் அப்படியே இருக்கும்.
நாம் வாங்கிய காப்பித்தூள் கட்டியாகி விட்டது என்பதற்காக இனிமேல் இருந்து அதனை தூக்கி எறியாதீர்கள். கட்டியான காப்பி தூளை எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு வெந்நீரை எடுத்து கொஞ்சமாக இந்த கட்டிப்பிடித்த காப்பித்தூளில் ஊற்றி லேசாக ஸ்பூன் விட்டு கலந்து கொள்ள வேண்டும்.
காப்பித்தூள் கரைய தொடங்கியபின் இந்த காப்பி தூள் கலவையை நன்றாக ஆற வைத்து பின் ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி மூடி வைத்து இறுக்கமாக மூடி வைக்கலாம். இந்த காப்பி தூளை ஊற்றி காபி போட்டு் குடித்தால் மிகவும் சுவையாக இருக்கும். நாம் உபயோகப்படுத்தும் காபி தூளை விட இதன் சுவை சற்று அதிகமாக தான் இருக்கும். எனவே வீடுகளில் இனிமேல் பெண்கள் இந்த முறையை உபயோகப்படுத்தி பாருங்கள்.
பானக்கம் -பானகத்தின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் செய்முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். பானக்கத்தின் நன்மைகள்: பொதுவாக பங்குனி சித்திரை மாதங்களில் தான் நம் ஊர்களில் திருவிழாக்கள்,…
Online Scam : சமூகத்தளத்தில் தோனியின் பெயரை பயன்படுத்தி ரூ.600 வரை மோசடி செய்ய முயற்சி. இன்றைய நாட்களில் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், X தளம் என்ற டிஜிட்டல் தளங்களில்…
Rajat Patidar : ஹைதராபாத் அணிக்கு எதிராக ரஜத் படிதார் ஆட்டம் பற்றி அஜய் ஜடேஜா புகழ்ந்து பேசியுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும்,…
Schools Reopen: புதுச்சேரி மாநிலத்தில் ஜுன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வரும் 29-ம் தேதி முதல்,…
Student Suicide : தெலுங்கானாவில் பள்ளி தேர்வில் தோல்வியடைந்ததால் இதுவரை 7 மாணவ மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தெலுங்கானா பள்ளி கல்வி வாரியம் நடத்தும் 11 மற்றும்…
Olympic 2024 : இந்தியாவை சேர்ந்த நீளம் தாண்டும் தடகள வீரரான ஸ்ரீசங்கர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகி உள்ளார். இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய…