கோடநாடு கொலை – கொள்ளை வழக்கு விசாரணையை ஜூன் 23க்கு ஒத்திவைத்தது உதகை அமர்வு நீதிமன்றம்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான உதகை கோடநாடு பங்களாவில் கடந்த 2017 ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி காவலாளி 11 பேர்கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டார். அங்கிருந்த முக்கிய ஆவணங்களும் கொள்ளையடிக்கப்பட்டன. அதில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் என்பவர் அதே ஏப்ரல் மாதம் 28இல் விபத்தில் உயிரிழந்தார்.
அடுத்தடுத்து நடந்த உயிரிழப்புகள், கொள்ளை சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அண்மையில் கூட கனகராஜ் உயிரிழப்பதற்கு முன்னதாக சந்தித்த எடப்பாடி ஜோதிடர் மற்றும் ஜெயலலிதாவுடன் ஒன்றாக இருந்த சசிகலா ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த இருந்ததாக செய்திகள் வெளியாகின.
இந்த வழக்கு விசாரணை விவரங்கள் கடந்த 5 வருடங்களாக உதகை முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு மாதமாக சிபிசிஐடி போலீசார் பல்வேறு ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். இதனை அடுத்து இன்று இந்த வழக்கு விசாரணையில், வழக்கின் விசாரணை வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் என ஒத்திவைத்து உதகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…
Bhuvneshwar Kumar : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் எடுத்த புவனேஷ்வர் குமாரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் …
Weather Update: கத்திரி வெயில் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…
Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே…
Kerala : கேரள மாநிலம் கொச்சியில் பச்சிளம் குழந்தையை பொட்டலம் கட்டி வீசப்பட்ட சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொச்சியின் பனம்பில்லி நகர் வித்யா நகர்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கிய மஜத எம்.பி பிரஜ்வலை பிடிக்க சிறப்பு புலனாய்வு குழு ஜெர்மனி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலியல்…