கேரளாவில் முதல்கட்டமாக 5 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல்

கேரள மாநிலத்தில் முதல்கட்டமாக இன்று 5 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது.

இடுக்கி,திருவனந்தபுரம்,கொல்லம், பத்தனம்திட்டை, ஆலப்புழை ஆகிய மாவட்டங்களில் தேர்தல் நடைபெறுகிறது.இதற்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது.மாலை 6 மணிக்கு இந்த வாக்குப்பதிவு நிறைவு பெறுகிறது.இந்த 5 மாவட்டங்களில் 395 உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 6911 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.கொரோனா கட்டுப்பாடு விதிகள் உள்ளாட்சி தேர்தலில் முறையாக பின்பற்றப்படும் என்றும் வாக்காளர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து,சமூக  இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் கேரள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.