கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் விவகாரத்தில் தலைமறைவான ஸ்வப்னா சுரேஷின் முன்ஜாமீன் வழக்கு இன்று ஐகோர்டில் விசாரணைக்கு வருகிறது.
கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் 30கிலோ தங்கட்டிகளை கடத்தி வந்த சரக்கு விமானம் சுங்க அதிகாரிகளிடம் சிக்கியது. இந்த வழக்கில் கேரள தகவல் தொடர்பு துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷ்க்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. மேலும் முன்னாள் தூதர ஊழியராக பணியாற்றிய சரித் மற்றும் மற்றும் அவரது மனைவிக்கும் இந்த வழக்கில் தொடர்புள்ளதாக கூறி பணியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் கேரளாவின் முதல் மந்திரியான பினராயி விஜயன் அவர்களின் முதன்மை செயலாளரான சிவசங்கரும், தலைமறைவான ஸ்வப்னாவும் நெருக்கமானவர் என்று கூறப்பட்டது.
இதனையடுத்து சிவசங்கரை பதவியிலிருந்து நீக்கம் செய்தனர். சமீபத்தில் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தலைமறைவான ஸ்வப்னா சுரேஷ், கேரள உயர்நீதிமன்றத்தில் தனக்கும், இந்த கடத்தல் சம்பவத்திற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்று கூறி முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து இந்த மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…