கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் விவகாரத்தில் மீண்டும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் வந்த பார்சலில் ரூ. 15 கோடி மதிப்பிலான 30கிலோ தங்கட்டிகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சரித், சந்தீப் நாயர் மற்றும் பைசல் பேரத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தேசிய புலனாய்வு நிறுவனம்(என்ஐஏ) மற்றும் சுங்கத்துறையால் நடத்தி வரும் விசாரணையில் 150கிலோ தங்கத்திற்கு மேல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனிடையே ஸ்வப்னா சுரேஷ் மூன்று முறை ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்து அதனை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்றைய தினம் இந்த வழக்கு தொடர்பாக முகமது அன்வர், ஹம்சத் அப்துல் சலாம், சம்ஜுமற்றும் அம்ஜித் அலி ஆகியோர் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதுடன், இவர்களுக்கு சொந்தமான இடங்களான கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள 6 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டதில் பல முக்கிய ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை இந்த வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Election2024: வெறுப்பு அரசியலுக்கு எதிராக நான் வாக்களித்து உள்ளேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டியளித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் வாக்குப்பதிவு இன்று 7 மணி முதல்…
ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியும் மோதிகிறது. ஐபிஎல்லின் 17-வது தொடரின் 42-வது போட்டியாக இன்றைய நாளில் கொல்கத்தா நைட்…
MK Stalin: கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வாட்டி வதைத்து வரும் வெயிலின் தாக்கம் நாளுக்கு…
PM Modi: இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரியை ராஜிவ் காந்தி ரத்து செய்தார் என பிரதமர் மோடி கூறிஉள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்…
East Africa: தான்சானியா நாட்டில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 155 பேர் உயிரிழந்துள்ளனர், 236 பேர் காயம் அடைந்துள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் கனமழையைத்…
Elections 2024: மக்களவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 2ஆம் கட்டமாக கர்நாடகா, கேரளா,…