கவுதம் அதானியுடன் பிரதமரின் வெளிநாட்டுப் பயணம் விவரம் வேண்டும்..! காங்கிரஸ் எம்.பி

அதானியுடன் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண விவரங்களை கோரி ஒப்புதல் நோட்டீஸ் அளித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். அவரது உரைக்கு நடுவே ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் “மோடி-அதானி பாய்-பாய்” என முழக்கங்களை எழுப்பினர்.

pmmodiparliamnet

இந்த அவையில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளார். இந்த ஒத்திவைப்பு நோட்டீஸில் தொழிலதிபர் கவுதம் அதானியுடன் பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த விவரங்களைக் கேட்டும், வெளிநாட்டு டெண்டர்களில் குழு பெற்ற பலன் குறித்த விவாதம் குறித்த விவரங்களை கோரியும் எழுதிருந்தது.

Congress MP Manikam Tagore 1

[File Image]

மேலும் அதானி குழுமம் குறித்த குறுகிய விற்பனையாளரான ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் அறிக்கையை நாடாளுமன்ற கூட்டு விசாரணைக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரியுள்ளனர்.

Leave a Comment