செந்தில் பாலாஜியின் பூர்வீக வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை.!

கடந்த 2023 ஜூன் மாதம் 14ஆம் தேதி தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் தற்போது வரையில் புழல் சிறையில் அமலாக்கதுறை விசாரணையில் இருக்கிறார்.

15ஆவது ஊதிய ஒப்பந்தம்.. குழு அமைத்த தமிழக அரசு..!

கடந்த 2023 மே மாதம் முதலே வருமானவரித்துறையினர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து அமலாக்கத்துறையினரும் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாகத்தான் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது கரூர் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் பூர்வீக வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. தற்போது இன்றும் அந்த வீடு இரண்டாவது முறையாக அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் என தகவல் வெளியாகி உள்ளது. அந்த வீட்டில் செந்தில் பாலஜியின் பெற்றோர் வசித்து வருகின்றனர்.

இதற்கு இடையில் பல்வேறு முறை ஜாமீன் கேட்டு  அமைச்சர் செந்தில் பாலாஜிஉச்ச மற்றும் உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்த அந்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. அதே போல் அமலாக்கத்துறையினர் சார்பில் நீதிமன்ற காவலும் தொடர்ந்து விசாரணைக்காக  நீட்டிக்கப்பட்டு வருகிறது.

Recent Posts

ஹோட்டல் சுவையில் நூடுல்ஸ் இனி வீட்டிலேயே செய்யலாம்.!

Noodles recipe-ஹோட்டல்களில் கிடைப்பது போல் அதே சுவையில் நூடுல்ஸ் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்: நூடுல்ஸ் =150 கிராம் எண்ணெய் =5…

29 mins ago

ஆறுதல் வெற்றியை பெறுமா பஞ்சாப் அணி ? ஹைதராபாத் அணியுடன் இன்று பலப்பரீட்சை !!

சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 69-வது போட்டியாக இன்று…

2 hours ago

IPL2024: சென்னையை வீழ்த்தி பிளே ஆப் சென்ற பெங்களூர்..!

IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…

9 hours ago

ஜம்மு காஷ்மீரில் கணவன் – மனைவி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு.!

சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

9 hours ago

பை பை ஐபிஎல் ..! இறுதி போட்டிக்கு முன் நியூயார்க் பறக்கும் இந்திய அணி வீரர்கள் !!

சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…

15 hours ago

கனமழை எதிரொலி: சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள்!

சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…

15 hours ago