சூர்யாவும் இல்ல..பட்லரும் இல்ல..ரோஹித் தான்.! வில்லியம்சன் அதிரடி கருத்து.!

ஐபிஎல் 2024 : சூர்யாவும் இல்ல..பட்லரும் இல்ல, ரோஹித் ஷர்மா தான் டி20 இரட்டை அடிப்பார் என கேன் வில்லியம்சன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்கள் முழு ஆதிக்கம் செலுத்தும் தற்போதைய சூழலில் டி20 போட்டியில் இரட்டை சதம் என்பது வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் புரிகிறது. நடந்து வரும் இந்த ஐபிஎல் தொடரில் 277, 283 போன்ற நம்ப முடியாத ஸ்கோர்களை நம்மால் பார்க்க முடிகிறது. அதே போல இந்த டி20 போட்டிகளிலும் ஒரு பேட்ஸ்மேன் இரட்டை சதம் விளாசுவது வெகு தூரத்தில் இல்லை என்பது மட்டும் புரிகிறது.

இந்த இரட்டை சத்தத்தை எந்த பேட்ஸ்மேன் அடிக்க போகிறார் என்று பேச்சும் சமூக தளத்தில் ரசிகர்கள் அவர்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் பேட்ஸ்மேனான கேன் வில்லியம்சன் இதை பற்றி நேற்றைய போட்டிக்கு பிறகு பேசி இருந்தார். அவர் பேசுகையில், “டி20-யில் முதல் இரட்டை சதம் அடிக்க இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

மேலும், அவர் தொடக்க வீரர் என்பதால் இந்த இரட்டை சதம் என்பது அவர் அடிப்பதற்கு ஒரு முயற்ச்சியாவது எடுப்பர் என நான் நம்புகிறேன். ஒருநாள் போட்டிகளில் மூன்று இரட்டை சதங்கள் அடித்த அனுபவம் ரோஹித்துக்கு இருப்பதால் இந்த டி20 இரட்டை சதம் அவருக்கு எளிதாக இருக்கும். எந்த நேரத்திலும் அவரது பேட்டிங்கில் இருந்து அந்த டி20 இரட்டை சதம் நாம் பார்க்க வாய்ப்பு உள்ளது.

இது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரிலேயே இந்த சாதனையை பதிவு செய்தாலும் நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை. பட்லர், சூர்யகுமார் யாதவ், க்ளாஸன் போன்ற அதிரடி வீரர்களுக்கு முன்னதாகவே ரோஹித் டி20 போட்டிகளில் இந்த இரட்டை சதம் அடிப்பார் என்று நான் நம்புகிறேன்”, என்று நேற்று போட்டி முடிவடைந்த பிறகு பேசி இருந்தார்.

இதற்கு முன் ஐபிஎல் தொடரில் 2013 ஆண்டு கிறிஸ் கெயில், புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக 66 பந்துகளுக்கு 175 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுதான் டி20 போட்டிகளில் ஒரு பேட்ஸ்மேன் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும், இதை அடுத்து வரும் எந்த பேட்ஸ்மேன் முறியடிக்கிறார் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Recent Posts

IPL2024: எளிதான இலக்கு…சென்னை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…

3 hours ago

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

9 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

10 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

11 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

12 hours ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

12 hours ago