தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்… 3 பேர் கைது 10 பேரிடம் தீவிர விசாரணை..!

கள்ளக்குறிச்சி: விஷச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்த வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 10 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தியதால் இதுவரை 35பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பி , மதுவிலக்கு அமலாக்கத்துறை காவல்துறையினர் என பலர் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டனர். இதனை அடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது.

சிபிசிஐடி அதிகாரி ஏடிஎஸ்பி கோமதி தலைமையில் குழு அமைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக சாராய வியாபாரி கோவிந்தராஜன் என்ற கன்னுகுட்டி கைது செய்யப்பட்ட நிலையில், அதனை தொடர்ந்து அவரது சகோதரன் தாமோதரன் மற்றும் கோவிந்தராஜன் மனைவி ரேவதி ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், 2 பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமும் தீவிர விசாரணையை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பல்வேறு சாராய வியாபாரி சின்னத்துரை என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். ஏற்கனவே 200 லிட்டர் விஷச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு இருந்த நிலையில், மேலும் 900 லிட்டர் விஷச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

Recent Posts

என்ன நடந்தாலும் அதை மட்டும் மாற்றக்கூடாது…அபிஷேக் சர்மாவுக்கு அப்பா கூறிய அட்வைஸ்!!

அபிஷேக் சர்மா : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அபிஷேக் சர்மா இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். அதன்படி தற்போது, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக…

34 mins ago

தமிழகத்தில் இவர்கள் மட்டும் இனி கட்டணமின்றி மண் எடுக்கலாம்.!

சென்னை : பாசனத் தொட்டிகள், குளங்கள், கால்வாய்கள், ஏரிகள் போன்ற நீர் ஆதாரங்களில் இருந்து வண்டல்மன் மற்றும் களிமண் ஆகியவற்றை விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் பொதுமக்கள்…

39 mins ago

8ம் வகுப்பு போதும் ..! அரசாங்க அலுவலக உதவியாளர் வேலை உங்களுக்கு தான் ..!

வளர்ச்சித் துறை ஆட்சேர்ப்பு : தமிழக அரசின், தமிழ் வளர்ச்சித் துறை ஆட்சேர்ப்பு 2024 சார்பில் அலுவலக உதவியாளர், துப்புரவாளர் மற்றும் தோட்ட துப்புரவாளர் போன்ற பணிகளுக்கு…

45 mins ago

பிரதமர் மோடியின் ரஷ்ய பயணம்.! முக்கிய விவரங்கள் இதோ…

டெல்லி: 3 நாள் பயணமாக ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இன்று பிற்பகல் ரஷ்யா சென்றடைய உள்ளார். பிரதமர் மோடி இன்று…

55 mins ago

சென்னை காவல் ஆணையர் இடமாற்றம்.! தமிழக அரசு திடீர் உத்தரவு.!

சென்னை: சென்னை மாநகர் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகர காவல் ஆணையராக…

1 hour ago

என்னை பற்றி ரசிகர்களுக்கு தெரியும்….சர்ச்சைகளுக்கு தனுஷ் வைத்த முற்றுப்புள்ளி!!

தனுஷ் : சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் பற்றி வதந்தியான விஷயங்கள் பரவுவது என்பது புதிதான விஷயம் இல்லை. அப்படி வதந்தியான தகவல்கள் பரவும்போது அதற்கு பிரபலங்கள் சூசகமாக…

2 hours ago