கிரிக்கெட்

‘வெற்றியை கொண்டாட எங்களுடன் சேருங்கள்’- ஜெய்ஷா டிவீட் ..!

பிசிசிஐ : இந்த ஆண்டில் நடைபெற்று வந்த மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிறைந்த தொடர் தான் 20 ஓவர் உலகக்கோப்பை தொடராகும். இந்த தொடரில் இந்திய அணி மிக பிரமாதமாக விளையாடி ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் உலகக்கோப்பையை திரில்லாக வெற்றி பெற்றனர். இந்த தொடரில் விளையாடிய இந்திய அணியின் ஒவ்வொரு வீரர்களும் தனிப்பட்ட முறையில் சிறப்பாக விளையாடினார்கள்.

இதன் காரணமாகவே இந்திய அணி இந்த தொடரை இந்திய அணி போராடி வென்றுள்ளனர். இதன் மூலம் 17 வருட கனவான டி20 கோப்பையும், 11 வருட கனவான ஐசிசி கோப்பையும் நிறைவேறியுள்ளது என்றே கூறலாம். இந்நிலையில், அமெரிக்காவில் விளையாடி வெற்றி பெற்ற இந்திய அணி மாலை தாயகம் திரும்ப உள்ளனர்.

இதனால் இந்தியா அணிக்கு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் பிரமாண்ட வரவேற்புடன் பாராட்டு விழா நடைபெற உள்ளது என தகவல்கள் வந்தது. அதனை தற்போது பிசிசிஐயின் செயலாளரான ஜெய்ஷா க்ஸ் தளத்தில் வெளியிட்ட ட்வீட் மூலம் உறுதி செய்துள்ளார். அவர் அந்த பதிவில், “இந்தியா அணியின் உலகக் கோப்பை வெற்றியை கௌரவிக்கும் வகையில் வெற்றி ஊர்வலத்தில் எங்களுடன் சேருங்கள்! ஜூலை 4 ஆம் தேதி மாலை 5:00 மணி முதல் மெரைன் டிரைவ் மற்றும் வான்கடே மைதானத்திற்கு வாருங்கள்.

மேலும், எங்களுடன் கொண்டாடுங்கள். இந்த நாளை மறக்காமல் குறித்து வைத்து கொள்ளுங்கள்” , என பதிவிட்டிருந்தார். தற்போது, இந்த நிகழ்வுக்கான தீவிர வேலையில் பிசிசிஐ இருந்து வருகிறது. மேலும், இந்திய அணியின் ரசிகர்கள் மிக ஆர்வத்துடன் இந்திய அணியின் வீரர்களை வரவேற்பதில் ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர்.

Recent Posts

கூகுள் மேப்புக்கு இனி ஆப்பு தான் ..! புவனை வைத்து கலக்கும் இஸ்ரோ!

ஜியோ போர்ட்டல் பூவன் : இஸ்ரோ தலைவரான சோம்நாத், ஜியோ போர்டல் புவன் என்னும் புதிய வழிகாட்டும் இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். நாம் சில நேரங்களில் கூகுள் மேப்பை…

6 hours ago

பாரிஸ் ஒலிம்பிக் 2024 : இந்திய அணியை அறிவித்தது தடகள சங்கம் ..!

ஒலிம்பிக் போட்டி : பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் இந்திய தடகள அணியின் பட்டியலை இந்திய தடகள சங்கம் அறிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில்…

7 hours ago

பெரம்பூரில் பரபரப்பு ..! பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை …!

பெரம்பூர் : பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த பெரம்பூரில் உள்ள…

7 hours ago

மாற்றம் இன்றே துவங்குகிறது.! பிரிட்டன் புதிய பிரதமர் கீர் ஸ்டார்மர் முதல் உரை.!

UK தேர்தல்: புறக்கணிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கீர் ஸ்டார்மர் தனது முதல் உரையில் பேசினார். பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்…

12 hours ago

வெந்தய டீ குடிப்பதால் நம் உடலில் ஏற்படும் மாயாஜாலங்களை தெரிஞ்சுக்கோங்க..!

Fenugreek tea-இன்றும் பலருக்கு காலை உணவாக இருப்பது டீ  தான். அது மட்டுமல்லாமல் ட்ரெஸ்ஸில் இருந்து பலருக்கும் விடுதலை தருவதும் டீ  தான் .இந்த பால் மற்றும்…

12 hours ago

இந்த ஜெர்ஸி எண்களுக்கு ஓய்வை அறிவிக்க வேண்டும்…! பிசிசிஐக்கு சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

சுரேஷ் ரெய்னா :  இந்திய அணியின் கிரிக்கெட் ஜெர்ஸி எண் '7' -க்கு பிசிசிஐ ஓய்வை அறிவித்தனர், அதே போல '45'& '18' என்ற ஜெர்ஸி எண்ணிற்கும்…

12 hours ago