Categories: Uncategory

சென்னையின் எஃப்.சி முன்னிலை!ஐ.எஸ்.எல் அரையிறுதி போட்டி….

நேற்று சென்னையின் எஃப்.சி மற்றும் கோவா அணிகள், இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் அரையிறுதி போட்டியில் மோதின. இரண்டு போட்டிகளாக நடக்கும் இந்த சுற்றின் முதல் போட்டி, கோவாவில் உள்ள, ஃபதோர்டா மைதானத்தில் நடந்தது.

ஆரம்பம் முதலே இரு அணிகளும் கடுமையாக போராடின. ஆனால், முதல் பாதி கோல் எதுவும் இல்லாமல் முடிந்தது. 64வது நிமிடத்தின் போது, கோவாவின் லான்சரோடே கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். கோவாவின் கோரோமினா, சென்னை வீரர்கள் 3 பேரை தாண்டி பந்தை அடிக்க, அதை கோல் கீப்பர் தடுத்தார். ஆனால், அது அருகே இருந்த லான்சரோடேவிடம் செல்ல அவர் எளிதாக கோல் அடித்தார்.

5 நிமிடங்கள் மட்டுமே கோவா முன்னிலையில் இருந்தது. 71வது நிமிடத்தில் சென்னை அணியின் க்ரெகரி நெல்சன் கொடுத்த பாஸை, அனிருத் தாபா கோலாக்கினார். இறுதியில் போட்டி 1-1 என முடிந்தது. இந்த சுற்றின் அடுத்த போட்டி 13ம் தேதி சென்னையில் நடக்கிறது.

ஐ.எஸ்.எல் தொடரில் இந்த ஆண்டு ‘அவே கோல் விதி’ சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது, அரையிறுதியின் இரண்டு போட்டிகள் முடிவில் இரண்டு அணிகளும் ஒரே அளவு கோல்கள் அடித்திருந்தால், எந்த அணி எதிரணியின் மைதானத்தில் அதிக கோல்கள் அடித்துள்ளதோ அந்த அணி வெற்றி பெறும். இதனால், இந்த போட்டியில் கோவா சென்று ஒரு கோல் அடித்துள்ள சென்னையின் எஃப்.சி, அடுத்து சென்னையில் நடக்கும் போட்டியில் கோல் எதுவும் அடிக்காமல் 0-0 என டிரா செய்தால் போதும்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

சிசிடிவியை பார்த்தால் உண்மை தெரியும்… ஸ்வாதி மாலிவால் பரபரப்பு.!

சென்னை: கெஜ்ரிவால் உதவியாளரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் ஸ்வாதி மாலிவால் இதுகுறித்து டிவீட் செய்துள்ளார். கடந்த மே 13ஆம் தேதி டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவரும்,…

29 seconds ago

55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று.. மீனவர்களுக்கு எச்சரிக்கை.!

சென்னை: தமிழகத்தில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல்…

31 mins ago

நண்பேன்டா! சந்தானத்தை வைத்து கல்லா கட்ட ஆர்யா போட்ட பலே திட்டம்?

சென்னை : சந்தானத்தை வைத்து நடிகர் ஆர்யா இரண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள 'இங்க நான்தான் கிங்கு' படம்…

35 mins ago

‘இது தோனிக்கு கடைசி சீசனா இருக்கும்னு எனக்கு தோணல ..’ ! – ராபின் உத்தப்பா

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…

52 mins ago

இனி வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தலாம்… ஆனால் ஒரு கண்டிஷன்.!

சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…

55 mins ago

அடுத்த 3 நேரத்தில் 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…

56 mins ago