அடடே இப்படி ஒரு ரசமா…? மூட்டுவலிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முடக்கத்தான்….!!!

வளர்ந்து வரும் நாகரீகமான வாழ்க்கை முறை, பல நோய்களையும் வளர்த்து எடுக்கிறது. இந்த நோய்கள் பெரியவர்களை மட்டுமல்லாது, சிறியவர்களை கூட தாக்குகிறது. இன்று முதியோருக்கு வரும் நோய்களில் மிக முக்கியமான ஒன்று இந்த மூட்டுவலி தான்.

மூட்டு வலி வந்தால், நம்மால் நம்முடைய வேலைகளை கூட செய்வது கடினமாகி விடுகிறது. ஆனால் எல்லா நோய்களுக்கும் தீர்வாக இறைவன் நமக்கு இயற்கையை பரிசாக அளித்துள்ளார். என்றைக்கு நாம் இயற்கையான மருந்துகளை விட்டு விட்டு செயற்கையான மருந்துகளை பின்பற்ற தொடங்கினோமோ, அது தான் நமக்கு பல நோய்கள் வருவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

செயற்கையான மருத்துவ முறைகளை பின்பற்றும் போது, மூட்டுவலி குணமாக்குவதற்கு வாய்ப்புகள் இருந்தாலும், ஒரு நோய் குணமானால் பல நோய்கள் வருவதற்கான வாசல்களை திறந்து விடுகிறது செயற்கை மருத்துவ முறைகள்.

முடக்கத்தான் :

மூட்டு வலியில் இருந்து பூரண சுகமளிக்க கூடியது முடக்கத்தான் கீரை. இந்த கீரையை நமது உணவில் அதிகமாக சேர்த்து வரும் போது மூட்டுவலியில் இருந்து விடுதலை அடையலாம். இந்த கீரை ஒரு சிறந்த வலி நிவாரணியாக செயல்படுகிறது.

 

இப்போது இந்த கீரையை வைத்து சுவையான முடக்கத்தான் ரசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

  • முடக்கத்தான் கீரை – 2 கைப்பிடியளவு
  • புளி – சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு
  • பூண்டு 10 பல் காய்ந்த மிளகாய் 5
  • மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
  • மிளகு & சீரகத்தூள் – 2 டீஸ்பூன்
  • நெய் – 50 கிராம்
  • கடுகு – 1 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை :

முதலில் புளியை ஊற வைத்து, கரைத்து அதன் கரைசலை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் பூண்டு மற்றும் மிளகாய் இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு கீரையை கழுவி தண்ணீர் சேர்த்து  கொதிக்க விட வேண்டும். ஆறிய பின் வடிகட்டிய தண்ணீரை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன்பின் வடிகட்டிய தண்ணீருடன் புளி கரைசல், சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பிறகு அரைத்த பூண்டு – மிளகாய் விழுது, மிளகு, சீரகத்தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

இறுதியாக ஒரு வாணலியில் நெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து ரசத்துடன் கலந்து இறக்கினால், சத்தான, சுவையான முடக்கத்தான் ரசம் தயார்.

 

Recent Posts

விந்தணுக்களின் வளர்ச்சி மற்றும் கருவுறுதலுக்கு.. X குரோமோசோம் மரபணு அவசியம் – புதிய ஆய்வு!

சென்னை: ஒரு புதிய ஆய்வில், X குரோமோசோம் மரபணு விந்தணுக்களின் வளர்ச்சிக்கும் ஆண்களின் கருவுறுதலுக்கும் அவசியம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட CSIR-Centre for Cellular…

16 mins ago

எப்பா .. இதுலாம் செஞ்சாதான் ஆர்சிபி பிளே ஆஃப் வர முடியுமா ? குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள் !

சென்னை : ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு இது வரை 3 அணிகள் தேர்வாகியுள்ள நிலையில் 4-வது அணிக்காக பெங்களூரு அணியும், சென்னை அணியும் நாளைய நாளில்…

21 mins ago

272 சீட்… தேர்தலில் தோற்றால் பாஜகவின் பிளான் ‘பி’ என்ன.? அமித்ஷா பதில்.!

சென்னை: பாஜகவுக்கு 272 எனும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் அக்கட்சியின் பிளான் பி என்ன என்ற கேள்விக்கு அமித்ஷா பதில் அளித்துள்ளார். நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கான…

26 mins ago

இன்று மும்பை லக்னோ மோதல்! கம்பேக் கொடுப்பாரா ரோஹித் சர்மா?

சென்னை : இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகிறது. ஐபிஎல் 2024 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17…

45 mins ago

யூ-டியூபர் பெலிக்ஸிற்கு மே 31ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல்.! கோவை நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை: யூ-டியூபர் பெலிக்ஸிற்கு மே 31ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல் விதித்தது கோவை நீதிமன்றம். பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியாக யூ-டியூபர் சவுக்கு சங்கர்…

56 mins ago

‘இதுதான் டைம் .. கரெக்ட்டா செஞ்சா உலகமே உன்ன மறக்காது’ !! சேட்டனுக்கு அட்வைஸ் கொடுத்த கம்பிர் !

சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…

1 hour ago