நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பாண் இந்திய திரைப்படமான புஷ்பா ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக 350 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இயக்குனர் சுகுமார் இயக்கிய இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்திருந்தார். பஹத் பாசில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமும் விறு விறுப்பாக தொடங்கப்பட்டு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் அடிக்கடி படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த தகவலும் பரவுவது வழக்கமான ஒன்று. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக தகவல்கள் வெளியானது.
இதனை தொடர்ந்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படத்தில் பிரபல நடிகையான சாய் பல்லவி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். படத்தில் பழங்குடியின பெண்ணாக அவர் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.
இதையும் படியுங்களேன்- மருத்துவமனையில் இருக்கும் பாரதிராஜாவுக்கு திருமணம் செய்து வைக்க துடிக்கும் இசைஞானி.!
படத்தின் கதையில் அவரது கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘ஷ்யாம் சிங்கா ராய்’, ‘கார்கி’ என தொடர்ச்சியாக அருமையான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் சாய் பல்லவிக்கு இந்த கதாபாத்திரமும் பேசப்படுவதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
சென்னை: கெஜ்ரிவால் உதவியாளரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் ஸ்வாதி மாலிவால் இதுகுறித்து டிவீட் செய்துள்ளார். கடந்த மே 13ஆம் தேதி டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவரும்,…
சென்னை: தமிழகத்தில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல்…
சென்னை : சந்தானத்தை வைத்து நடிகர் ஆர்யா இரண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள 'இங்க நான்தான் கிங்கு' படம்…
சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…
சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…
சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…