Aravind Kejirival [file image]
அரவிந்த் கெஜ்ரிவால்: நேற்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேற்று வழங்கப்பட்ட ஜாமீனை நிறுத்தி வைத்த நிலையில், தற்போது ஜாமீன் வழங்க இடைக்கால தடைவிதித்துள்ளது டெல்லி உயர் நீதிமன்றம்.
கடந்த மார்ச்-21 ம் தேதி மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லியின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நேற்றைய தினம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது டெல்லி சிறப்பு நீதிமன்றம்.
நேற்று விசாரணை நீதிமன்றம் அளித்த ஜாமீன் உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறையினர் அப்போது 48 மணி நேரம் அவகாசம் கேட்டிருந்தனர் அதனை டெல்லி சிறப்பு நீதிமன்றம் நீதிபதி மறுத்து ஜாமீன் வழங்கியிருந்தார்,
மேலும், அதனை எதிர்த்து அமலாக்கத்துறை டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியதால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அளித்த ஜாமீனை நிறுத்தி வைப்பதாக காலையில் உத்தரவிட்டது டெல்லி உயர் நீதிமன்றம்.
சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவில் தவறு உள்ளதாக அமலுக்கத்துறை தரப்பில் வாதத்தை முன்வைத்துள்ளனர். அதனை தொடர்ந்து, தற்போது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறப்பு நீதிமன்ற அளித்த ஜாமீனுக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், அடுத்த 3 நாட்களுக்குள் இந்த வழக்கின் தீர்ப்பை வழங்குவதாக உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
UK தேர்தல்: புறக்கணிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கீர் ஸ்டார்மர் தனது முதல் உரையில் பேசினார். பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்…
Fenugreek tea-இன்றும் பலருக்கு காலை உணவாக இருப்பது டீ தான். அது மட்டுமல்லாமல் ட்ரெஸ்ஸில் இருந்து பலருக்கும் விடுதலை தருவதும் டீ தான் .இந்த பால் மற்றும்…
சுரேஷ் ரெய்னா : இந்திய அணியின் கிரிக்கெட் ஜெர்ஸி எண் '7' -க்கு பிசிசிஐ ஓய்வை அறிவித்தனர், அதே போல '45'& '18' என்ற ஜெர்ஸி எண்ணிற்கும்…
உத்தரபிரதேசம் : எதிர்பாராமல் நடக்கும் விபத்து சம்பவங்களில் சிலர் பலியாகும் செய்திகளை பார்த்தோம் என்றாலே நமக்கு வேதனையாகிவிடும். அப்படி தான் உத்தரபிரதேசம்ஹர்தோய் மாவட்டத்தில், பெட்ரோல் பங்கில் நின்று கொண்டிருந்த…
குஜராத் : குஜராத் அரசு, அம்மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்தியுள்ளது. முதல்வர் பூபேந்திர படேலின் அலுவலகத்தின்படி, ஏழாவது ஊதியக் குழுவின் கீழ்…
இந்திய கடற்படை 2024 : இந்தியக் கடற்படை (Indian Navy) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 10+2 (B.Tech) கேடட் நுழைவுத் திட்டம் (நிரந்தர கமிஷன்) பணியிடங்களுக்கான விரிவான…