அவரால் மட்டும் தான் அது முடியும்! ரிஷப் பண்ட் குறித்து ரோஹித் சர்மா!

Rohit Sharma : இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா ரிஷப் பண்ட்டை பற்றி பாராட்டி பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தற்போது ஐபிஎல் போட்டியில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். இதற்கிடையில், சமீபத்தில் கிளப் ப்ரேரி ஃபயர் என்ற யூடியூப்
சேனலுக்கு பேட்டி அளிக்கும் போது இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் தான் தன்னை சிரிக்க வைக்கும் நல்ல வீரர் என்று புகழ்ந்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய ரோஹித் சர்மா ” எனக்கு ரிஷப் பண்ட்டை ரொம்பவே பிடிக்கும். அவர் செய்யும் விஷயங்கள் எனக்கு சிரிப்பை ஏற்படுத்தும்.

ரிஷப் பண்ட்டை நான் சிறிய வயதில் இருந்தே பார்த்துக்கொண்டு இருக்கிறேன். போட்டி நடந்து கொண்டு இருக்கும்போது அவர் ஸ்டம்புகளுக்குப் பின்னாடி இருந்து செய்யும் விஷயங்கள் எல்லாம் எனக்கு சிரிப்பாக இருக்கும். அவருக்கு விபத்து ஏற்பட்டு கிரிக்கெட் விளையாடாமல் இருந்தது எனக்கு ஏமாற்றமாகவும் வருத்தமாகவும் இருந்தது. அவர் திரும்ப எப்போது விளையாடுவார் என ஆவலுடன் காத்து இருந்தேன்.

தற்போது அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருவதை பார்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் அப்போதில் இருந்து இப்போது வரை எனக்கு பிடித்த காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார். அவர் காயத்தில் இருந்தபோது அவர் என்னை சிரிக்க வைத்த சம்பவங்கள் தான் நினைவுக்கு வந்தது. என்னை சிரிக்க வைப்பதில் அவர் தான் சிறந்தவர்.

உண்மையில் சொல்லவேண்டும் என்றால் நான் சிரிக்கவேண்டும் என்றால் போட்டிகளில் விளையாடி கொண்டு இருக்கும் போதோ அல்லது உணவு இடைவெளிகளில் போதோ அவருடைய பக்கத்தில் இருந்தாலே போதும். என்னை மட்டும் இல்லை அவருடன் இருக்கும் அனைவரையுமே எதாவது சொல்லிக்கொண்டு சிரிக்க வைத்துவிடுவார். என்னை சிரிக்க வைக்க அவரால் மட்டும் தான் முடியும் ” எனவும் ரோஹித் சர்மா கூறியுள்ளார். மேலும், ரிஷப் பண்ட் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணிக்காக கேப்டனாக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Recent Posts

IPL2024: எளிதான இலக்கு…சென்னை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…

3 hours ago

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

9 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

10 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

12 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

13 hours ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

13 hours ago