எல்லையில் படைகளை குவித்து வரும் சீனா… இந்தியாவும் படைகளை குவித்து பதிலடிக்கு தயாராகும் இந்தியா….

சீன எல்லைக்குள் நுழைந்து சீன வீரர்களின் ரோந்து பணிகளை  இந்திய வீரர்கள் தடுப்பதாக சீனா மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது.

நம் அண்டை நாடான சீன நமக்கு மிகவும் குடைச்சல் கொடுத்துவரும் நாடு. இந்த நாட்டை குடியரசாக உலகில் முதன்முதலில் அங்கிகரித்த நாடு இந்தியா. ஆனால் அந்த நன்றியை மறந்த சீன இந்தியாவுடன் நட்பாக இருப்பதாக காட்டிக்கொண்டு 1962 இல் முதுகில் குத்தியதை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இன்றளவும் லடாக் யூனியன் பிரதேசத்தின் அகாசின் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் வடகிழக்கு மாநிலங்களுக்கான ஒரே தொடர்பு மற்றும் போக்குவரத்து சிக்கிம் மாநிலத்தின்  கீழ் பகுதியிலிருக்கும் டார்ஜிலிங் வழியாகத்தான். இந்த இடத்தை துண்டித்தால் வடகிழக்கு மாநிலங்களுடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்படும். இதற்காகவே  சீனா  டோகாலாம் பிரச்சனையை ஏற்கனவே ஏற்படுத்தியது.
அதன் பிறகு தற்போது நடக்கும் பிரச்சனை மேலும்  தீவிரமாகி வருகிறது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட தகவல்படி சிக்கிம் பகுதியில் இந்திய வீரர்கள் எல்லைத் தாண்டி சீன எல்லைக்குள் வந்ததாக குற்றம் சாட்டியுள்ளது.

இந்தியா உடனடியாக தனது வீரர்களை திரும்ப பெற வேண்டும் என சீனா கூறியுள்ளது.இதற்கு இந்திய தரப்பில்  பதில் ஏதும் அளிக்கவில்லை. தற்போது மோதல் நீடித்து வரும் நான்கு முக்கிய இடங்களுள் சிக்கிமில் உள்ள நாகு லா என்ற இடமும் ஒன்று.இது தவிர பாங்கொங் ஏரி, கல்வான் ஆற்றுப்பகுதி மற்றும் லங்மார்போ ஆகிய பகுதிளிலும் மோதல் நீடித்து வருகிறது. இந்த பகுதிகளில் இரு நாட்டு இராணுவங்களும் அதிக படைகளை குவித்து வருகிறது. ஏற்கனவே மே 5ம் தேதி பாங்கோங் ஏரியிலும், மே 9ல் நாகுலா பகுதியிலும் மோதல் ஏற்பட்டது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா கட்டுமானம் ஏற்படுத்தி வருவதாக சீனா கூறி வருகிறது. முன்னதாக சீனாவின் மாவோ இந்தியா மீது போர் தொடுத்த போது அதற்கு இங்கிருந்து ஆதரவு அளித்த ஒரு கட்சி இரண்டாக பிளந்ததை அனைவரும் அறிவார். எனவே  இந்தியா-சீனா விவகாரத்தில் இந்தியர்களாக  இந்திய உணர்வுடன் இந்த விவகாரத்தை அனுகவேண்டும் என்பதே இந்திய உணர்வுள்ள அனைவரது கோரிக்கையாகும்.

Kaliraj

Recent Posts

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

5 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

10 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

10 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

11 hours ago

உருவாகிறது பயோபிக்! அண்ணாமலையாக நடிக்கும் விஷால்?

Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…

11 hours ago

கொளுத்தும் வெயிலில்.. இந்த 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!

Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…

12 hours ago