நேற்று முன்தினம் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட்டை இழந்து 233 ரன்கள் எடுத்திருந்த நிலையில், நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி 244 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இதையடுத்து, இறங்கிய ஆஸ்திரேலிய அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழக்க, முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை விட 53 ரன்கள் முன்னிலையுடன் நேற்று 2-வது இன்னிங்சை இந்திய அணி தொடங்கியது. தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, மயங்க் அகர்வால் இருவரும் களமிறங்கினர்.
2-வது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 1 விக்கெட்டை இழந்து 9 ரன்கள் எடுத்த நிலையில், இன்று மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி ஆட்டம் தொடக்கத்திலேயே இருந்து விக்கெட்டை இழந்து 36 ரன்னில் 9 விக்கெட்டை இழந்தனர். கையில் ஏற்பட்ட காயத்தால் முகமது ஷமியின் வெளியேறியதால் இந்திய அணி ஆட்டத்தை முடித்துக் கொண்டது.
இந்நிலையில், இந்திய அணி 36 ரன்கள் எடுத்தநிலையில் 90 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்க உள்ளது. புஜாரா, ரஹானே ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் ரன் எடுக்காமல் விக்கெட்டை இழந்தனர். கம்மின்ஸ் 4 , ஹேசில்வுட் 5 விக்கெட்டை வீழ்த்தினர். மேலும், 46 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி டெஸ்ட் போட்டியில் மிக குறைந்த ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணி 36 ரன்கள் எடுத்ததன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் எடுத்த மிகக்குறைவான ரன் இதுவாகும். இந்தியா 1974-இல் இங்கிலாந்துக்கு எதிராக 42 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், குஜராத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோத இருந்தன. இந்த போட்டி தொடங்கியிருந்த போது மழை…
சென்னை : ஐபிஎல்லில் நடக்கவிருக்கும் பெங்களூரு-சென்னை போட்டிகளுக்க்கான டிக்கெட் எடுக்கும் முயற்சியில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ரூ.67,000 வரை இழந்துள்ளார். ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே-ஆப் சுற்றுக்கான…
சென்னை: பிஎம்டபிள்யு ரக புதிய மாடலான எம் 1000 XR மாடல் இந்தியாவில் 45 லட்ச ரூபாய்க்கு களமிறங்கியுள்ளது. பைக் பிரியர்களால் அதிக கவனம் ஈர்க்கும் அதிவேக…
Plank exersize-பிளாங்க் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இன்றைய தலைமுறையினர் அதிகம்…
சென்னை : தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து இளையராஜா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களை உரிமையை பெறாமல் எக்கோ மற்றும்…
சென்னை: எல்லை தாண்டி வந்து, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…