ஆண்டுதோறும் உலகளாவிய சக்தி வாய்ந்த தலைவர்கள் ஜெர்மனியின் முனிச் நகரில் அமைதி மற்றும் ராஜதந்திரம் குறித்து விவாதிக்க ஒரு மாநாடு நடத்தப்படும். இந்த வகையில், முனிச் நகரில் முடிந்த இந்த மாநாட்டை தொடர்ந்து, அங்கு ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்தியாவின் காஷ்மீர் பிராந்தியத்தில் எந்தவொரு தீவிரவாத தாக்குதல் ஏற்பட்டாலும், அது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ராணுவ மோதலின் புதிய உச்சத்தை தொடும் என்றும், அதனால் ஏற்படும் தீவிரமான அபாயத்தால் இரு நாடுகளுக்கும் இடையே அணுஆயுத போர் ஏற்படும் என்றும், தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அணுசக்தி போர் 2025ல் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், அவ்வாறு ஒரு சூழல் இரு நாடுகளுக்கும் ஏற்பட்டால் 50 முதல் 125 மில்லியன் மக்கள் கொல்லப்படக்கூடும் என்றும், தற்போது, இந்தியா மற்றும் பாகிஸ்தானில் தலா 100 முதல் 150 அணு ஆயுதங்கள் இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான அணு ஆயுத போர் ஏற்பட்டால் இதில், 15 முதல் 100 கிலோடோன் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்றும், மொத்தமாக 50 முதல் 125 மில்லியன் மக்கள் உடனடியாக பலியாவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. இந்தாண்டில் கவனிக்கப்பட வேண்டிய 10 மோதல்கள் பட்டியலில் ஆப்கானிஸ்தான்,ஏமன் மற்றும் பாரசீக வளைகுடா ஆகியவற்றுடன் இப்போது, காஷ்மீர் விவகாரமும் சேர்ந்துள்ளது.
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான தல தோனி தற்போது துபாய் ஐ 103.8 என்ற தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று…
சென்னை : இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரரான சுமித் நாகல் நடைபெற்று வரும் ஜெனிவா ஓபன் டென்னஸி தொடரின் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியுள்ளார். மண் தரையில்…
சென்னை: சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'கொட்டுக்காளி' படம் டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட தேர்வாகியுள்ளது. ஜூன் 14-24 தேதிகளுக்கு இடையில் ருமேனியாவில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில்…
சென்னை: 4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அகமதாபாத்தில் கைது செய்யப்பட்டது குறித்து குஜராத் டிஜிபி செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார். குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ்…
சென்னை : அமிர்தா ஐயர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பலரும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை…
சென்னை : நடைபெற்று வரும் 5-ம் கட்ட வாக்குப்பதிவில் தற்போது மாலை 5 மணி வரையில் 61.90% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 5-ம் கட்ட மக்களவை தேர்தல்…