வருமான வரி செலுத்துவோர் அடல் ஓய்வூதிய திட்டத்தில் சேர முடியாது – மத்திய அரசு

அடல் ஓய்வூதிய திட்டத்தில் வருமான வரி செலுத்துவோர் இணைய முடியாது என நிதியமைச்சகம் அறிவிப்பு.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான அடல் ஓய்வூதிய (Atal Pension Yojana) திட்டத்தில் வருமான வரி செலுத்துவோர் இணைய முடியாது என்று மத்திய அரசு புதிய விதியை அறிவித்துள்ளது. இந்த புதிய விதி அக்டோபர் 1-ஆம் தேதி அமலுக்கு வருவதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அடல் ஓய்வூதிய திட்டத்தில் 18 முதல் 40 வயது வரை யார் வேண்டுமானாலும்  சேர அனுமதிக்கப்பட்டன.

அமைப்புசாரா தொழிலாளர்களின் ஓய்வு காலத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இதில் வரி செலுத்துவோர் அக்டோபர் 1-ஆம் தேதிக்கு பிறகு இணைந்தால் அவர்களது கணக்கு முடிக்கப்பட்டு, பணம் திரும்ப வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமைப்புசாரா தொழிலாளர்களின் நலன் கருதியே இருந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது.

அடல் ஓய்வூதிய யோஜனா திட்டம் 2015 இல் தொடங்கப்பட்டது, இது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) நிர்வகிக்கப்படுகிறது. இது 18 முதல் 40 வயது வரை உள்ள அனைத்து வங்கிக் கணக்கு வைத்திருக்கும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உருவாக்கப்பட்டது.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஓய்வூதியத் தொகையின் அடிப்படையில் பங்களிப்புகள் வேறுபடுகின்றன. சந்தாதாரர்கள் 60 வயதில் உத்தரவாதமான குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறுவார்கள். இந்த நிலையில், அக்டோபர் 1 முதல், வருமான வரி செலுத்துபவராக இருக்கும் எந்தவொரு குடிமகனும் இந்தத் திட்டத்தில் சேரத் தகுதியற்றவர் என்று கூறப்பட்டுள்ளது.

Recent Posts

‘இதுதான் டைம் .. கரெக்ட்டா செஞ்சா உலகமே உன்ன மறக்காது’ !! சேட்டனுக்கு அட்வைஸ் கொடுத்த கம்பிர் !

சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…

6 mins ago

முழுக்க முழுக்க சிரிப்பு தான்! ‘இங்க நான்தான் கிங்கு’ படத்தின் டிவிட்டர் விமர்சனம்!

சென்னை : இங்க நான்தான் கிங்கு படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனங்களை கூறி வருகிறார்கள். காமெடியான கதைகளை தேர்வு செய்து நடித்து மக்களை…

22 mins ago

நாய்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி.? ‘மரம் ஐடியா’வை பகிர்ந்த மத்திய அரசு.!

சென்னை: நாய்களிடம் இருந்து தப்பிப்பது தொடர்பான சில பாதுகாப்பு வழிமுறைகளை மத்திய கால்நடைத்துறை தெரிவித்துள்ளது. சமீப காலமாகவே தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் தெருநாய்கடி…

33 mins ago

நாளை பலப்பரீட்சை.. ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் அடித்த தோனி.!

சென்னை: வாழ்வா சாவா என்ற தருணத்தில் இருக்கும் சிஎஸ்கே - ஆர்சிபி இடையேயான ஐபிஎல் போட்டிக்கு முன் தோனி ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் செய்தார்.…

36 mins ago

எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் விராட் கோலியை தடுக்க முடியாது! புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்!

சென்னை : விராட் கோலி பார்மை எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் தடுக்க முடியாது என முகமது கைஃப் தெரிவித்துள்ளார். மே 18-ஆம் தேதி பெங்களூர் சின்ன சாமி…

1 hour ago

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும்.. பிரதமர் மோடி பரபரப்பு.!

சென்னை: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும் என பிரதமர் மோடி உ.பியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் நடைபெற்ற…

1 hour ago