பீகாரில் ஹோமியோபதி மருந்துகளை வைத்து கள்ளச்சாராயம்.! வெளியான அதிர்ச்சி தகவல்கள்.!

பீகாரில், கள்ளச்சாராயம் தயாரிப்பதற்கு ஹோமியோபதி மருந்துகள் கொண்ட ரசாயனங்கள் மற்றும் சர்க்கரை உள்ளிட்ட மேலும் சில பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாடுகளுக்கு  முன்னர் நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம் என்றால் அது பீகார் கள்ளச்சாராய சம்பவம் தான். பீகார் சரண் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 72 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து , இசுவாபூர் காவல் நிலைய அதிகாரி உட்பட 5 அரசு அதிகாரிகள் அண்மையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த பீகார் காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) காவல் துறையினர், இதுவரை முக்கிய குற்றவாளியான மருத்துவர் ராஜேஷ் சிங் உட்பட 5 பேரை கைது செய்தனர். தகினா கிராமத்தைச் சேர்ந்த ஷைலேந்திர ராய், துப்நகர் தோப்வால் கிராமத்தைச் சேர்ந்த சோனு குமார் மற்றும் டோய்லா கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுன் மஹ்தோ மற்றும் சஞ்சய் மஹ்தோ ஆகியோர் மீதம் கைதான அந்த 4 பேர் ஆவர்.

தற்போது மேலும் ஒரு கூடுதல் தகவலாக இந்த கள்ளச்சாராயம் தயாரிப்பதற்கு ஹோமியோபதி மருந்துகள் கொண்ட ரசாயனங்கள் மற்றும் சர்க்கரை உள்ளிட்ட மேலும் சில பொருட்கள் கொண்டு இந்த கள்ளச்சாராயம் தயாரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லால்பூர் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட நூன்நகரில் வசிக்கும் மருத்துவர் ராஜேஷ் சிங், சரண் மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு கள்ளச்சாராய விற்பனையை தொடங்கியுள்ளார்.

இதற்கிடையில், கள்ளச்சாராயம் உயிரிழப்புகள் குறித்து விசாரிக்க தேசிய மனித உரிமைகள் ஆணைய (NHRC) குழு கடந்த செவ்வாய்க்கிழமை பீகாரில் உள்ள சாப்ரா சதார் மருத்துவமனைக்கு வந்திருத்து விசாரணை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment