அமெரிக்காவுக்கு சட்டவிரோத குடியேற்றம்… 21 குஜராத்தியர்களுக்கு சிக்கல்… ஏஜென்ட்களுக்கு வலைவீச்சு.!

கடந்த வியாழன் அன்று ஐக்கிய அரபு நாட்டில் இருந்து அமெரிக்காவில் உள்ள நிகரகுவா எனும் இடத்திற்கு 303 பயணிகள் உடன் தனியார் விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் பயணித்த 303 பயணிகளில் 299 பேர் இந்தியர்கள் என்றும், 11 சிறார்கள் அந்த விமானத்தில் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த விமானமானது எரிபொருள் நிரப்பும் பொருட்டு பாரிஸில் இருந்து 150 கிமீ தொலையில் வத்ரி எனும் விமான நிலையத்தில் நின்றுள்ளது. அப்போது அந்த விமானநிலைய அதிகாரி பயணிகளின் விவரத்தை ஆராய்ந்த போது, அதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்பதும், அவர்கள் துபாய் மூலம் அமெரிக்கா செல்ல இருந்ததும் தெரியவந்தது.

பாரிஸ் விமான நிலையத்தில் 3 நாளாக தவித்த 300 இந்தியர்கள்.? நீதிபதிகள் அதிரடி உத்தரவு.! 

அதனால்,  சந்தேகத்தின் பெயரில் அவர்கள் அனைவரிடத்திலும் அங்குள்ள விமானநிலைய அதிகாரிகள் தனித்தனியே விசாரணை மேற்கொண்டனர். இதனால், 3 நாட்களாக பயணிகள் பாரிஸ் விமான நிலையத்தில் இருக்க வேண்டிய சூழல் நிலவியது. அதன் பின்னர், கடந்த சனிக்கிழமை மாலை பெரும்பாலான இந்தியர்கள் நாடு திரும்ப பாரிஸ் நாட்டு நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

இதனை தொடர்ந்து,, 276 இந்திய பயணிகள் டெல்லி புறப்பட்டனர். அதில் 21 பயணிகள் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள். டெல்லியில் இருந்து 21 குஜராத் பயணிகளும் சொந்த ஊர் திரும்பினர்.  ஒரே நேரத்தில் 21 பேர் அமெரிக்க செல்ல திட்டமிட்டு இருந்தததால், சந்தேகமடைந்த குஜராத் புலனாய்வு அமைப்பு தற்போது விசாரணையை தீவிரப்படுத்தியது.

அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு சட்டவிரோதமாக ஆட்களை அனுப்பும் ஏஜென்ட்கள் பற்றியும் விசாரணையை குஜராத் புலனாய்வு அமைப்பு தீவிரப்படுத்தியது. சொந்த ஊர் திரும்பிய 21 குஜராத் பயணிகளும் பனஸ்கந்தா, மெஹ்சானா, காந்திநகர், ஆனந்த் மற்றும் பதான் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள். அந்த 21 பேரையும் அமெரிக்க அனுப்ப ஏற்பாடு செய்த 6 ஏஜெண்ட்களையும் குஜராத் புலனாய்வு அமைப்பினர் தேடி வருகின்றனர். மேலும், சொந்த ஊர் திரும்பிய 21 பேரிடமும் குஜராத் சிறப்பு புலனாய்வு அமைப்பினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Recent Posts

சிசிடிவியை பார்த்தால் உண்மை தெரியும்… ஸ்வாதி மாலிவால் பரபரப்பு.!

சென்னை: கெஜ்ரிவால் உதவியாளரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் ஸ்வாதி மாலிவால் இதுகுறித்து டிவீட் செய்துள்ளார். கடந்த மே 13ஆம் தேதி டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவரும்,…

3 mins ago

55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று.. மீனவர்களுக்கு எச்சரிக்கை.!

சென்னை: தமிழகத்தில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல்…

33 mins ago

நண்பேன்டா! சந்தானத்தை வைத்து கல்லா கட்ட ஆர்யா போட்ட பலே திட்டம்?

சென்னை : சந்தானத்தை வைத்து நடிகர் ஆர்யா இரண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள 'இங்க நான்தான் கிங்கு' படம்…

37 mins ago

‘இது தோனிக்கு கடைசி சீசனா இருக்கும்னு எனக்கு தோணல ..’ ! – ராபின் உத்தப்பா

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…

55 mins ago

இனி வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தலாம்… ஆனால் ஒரு கண்டிஷன்.!

சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…

58 mins ago

அடுத்த 3 நேரத்தில் 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…

58 mins ago