நானா இருந்தால் சாம் கரனை டீம்ல வைக்க மாட்டேன் ! வீரேந்திர சேவாக் ஓபன் டாக் !

Shewag : நடந்து வரும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் தற்போதய கேப்டனான சாம் கர்ரனை அணியில் வைக்க மாட்டேன் என சேவாக் அவரது கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனான ஷிகர் தவான் காயம் ஏற்பட்டுள்ளதால் கடந்த ஒரு சில போட்டிகளில் அவர் விளையாடுமல் இருந்தார். இதனால் அவருக்கு பதிலாக பஞ்சாப் அணியின் இளம் ஆல்-ரவுண்டரான சாம் கரன் பஞ்சாப் அணியை வழி நடத்திவந்தார். இந்நிலையில், நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் குஜராத் அணியுடன் ஒரு தோல்வியை சந்தித்தது பஞ்சாப் அணி.

இதனால் சாம் கரனும், பஞ்சாப் அணியும் பல கலவையான விமர்சனங்களுக்கு உள்ளாகினர். அதிலும் இந்திய அணியின் முன்னாள் வீரரும், பஞ்சாப் அணியின் முன்னாள் வீரருமான வீரேந்திர சேவாக், பஞ்சாப் அணியின் தற்போதையே கேப்டனான சாம் கரனின் ஃபார்ம் குறித்து அவரது கருத்தை க்ரிக்பஸ்ஸிடம் பேசி இருந்தார்.

அவர் கூறுகையில், “நான் பஞ்சாப் அணியில் இப்பொது இருந்திருந்தால் சாம் கரனை பேட்டிங் ஆல்-ரவுண்டராகவோ அல்லது பவுலிங் ஆல்-ரவுண்டராகவோ அணியில் வைத்திருக்க மாட்டேன். ஏனென்றால், ஒரு சில ரன்கள் பேட்டிங்கில் எடுத்து மற்றும் சில சொல்லும் அளவிற்கு பவுலிங் ஸ்பெல் யார் செய்தாலும் அப்படிப்பட்ட வீரரால் எந்த ஒரு பயனும் அணிக்கு இல்லை.

நீங்கள் ஒன்று பேட்டிங்கில் மட்டும் சிறந்து விளங்க வேண்டும் இல்லை என்றால் சின்ன பேட்டிங்கால் கூட போட்டியையாவது வெல்ல வேண்டும்.  அதே போல பந்து வீசினாலும் வெறித்தனமாக விக்கெட்டுக்காக நீங்கள் வீச வேண்டும் அல்லது பந்து வீசவே கூடாது”, என்று க்ரிக்பஸ்ஸிடம் அளித்த பேட்டியில் சேவாக் பேசி இருந்தார்.

சாம் கரன், நேற்றைய போட்டியில் 2 ஓவர் பந்து வீசி 18 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்திருந்தார். மேலும், பேட்டிங்கில் அவர் தொடக்க வீரராக களமிறங்கி வெறும் 20 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதனை கருத்தில் கொண்டு தான் விரேந்தர சேவாக் அவரை குறித்து விமர்சித்து பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

மீண்டும் ரூ.55,000- ஐ நெருங்கும் தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.640 உயர்வு.!

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல்…

7 mins ago

நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை ! ஒப்பு கொண்ட மும்பை கேப்டன் !

சென்னை : நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்த பிறகு மும்பை அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா தோல்வியடைந்ததற்கு இதுதான் காரணம் என கூறி பேசி இருந்தார்.…

41 mins ago

திருமணத்திற்காக ஷாப்பிங் சென்ற போது பயங்கர விபத்து.. 6 வயது சிறுவன் உள்பட 5 பலி.!

சென்னை: ஆந்திரவில் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே குத்தி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார்,…

50 mins ago

ரூ.5 லஞ்சம் வாங்கிய கம்பியூட்டர் ஆபரேட்டர்.! கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை.!

சென்னை : குஜராத்தில் 5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி  ஆபரேட்டரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. குஜராத் அகமதாபாத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் மோர்கண்டா கிராம…

58 mins ago

கெஜ்ரிவால் வீட்டில் நடந்தது என்ன.? ஆம் ஆத்மி விளக்கமும்.. ஸ்வாதி மாலிவால் பதிலும்…

சென்னை: ஸ்வாதி மாலிவால் விவகாரம் பாஜகவின் சதி என ஆம் ஆத்மி விளக்கம் அளித்துள்ளது. கடந்த மே 13ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு…

1 hour ago

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் பரப்புரை இன்றுடன் ஓய்கிறது.!

சென்னை: 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 49…

2 hours ago