என் சம்பளத்தை கொடுக்க விரும்புகிறேன்., மக்களும் முன் வரவேண்டும் – ரிஷப் பண்ட்

வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட உத்தரகண்டில் மீட்புப் பணிகளுக்காக என் சம்பளத்தை கொடுக்க விரும்புகிறேன் என்று ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.

உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்திலுள்ள நந்ததேவி பணிக்குன்றில் ஒரு பகுதி திடீரென்று நேற்று உடைந்து விழுந்தது. இதனால் அப்பகுதிகளில் உள்ள நதிகளில் திடீரென்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் கரையோரம் அமைந்திருந்த வீடுகள் வெள்ளத்தில் அடித்து சென்றது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாநில பேரிடர் மேலாண்மைத் துறை நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், தேசிய பேரிடர் மீட்பு முழு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. மக்கள் விரைவில் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்று கூறப்படுகிறது. இதில் 18 பேர் சடலமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்றவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். வெள்ள நீர் அதிகரித்ததால் நதியின் அருகில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலா ரூ.4 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார். இந்நிலையில், இதுகுறித்து இந்திய வீரர் ரிஷப் பண்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், உத்தரகண்டில் பனிச்சரிவு உயிரிழப்புகள் என்னை வலியில் ஆழ்த்துகின்றன. மீட்புப் பணிகளுக்காக என் போட்டி சம்பளத்தை கொடுக்க விரும்புகிறேன். மக்களும் இதற்கு முன் வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

7 மாத ஆண் குழந்தை… உயிரிழந்த கர்ப்பிணி கஸ்தூரியின் பிரேத பரிசோதனை நிறைவு.!

Kollam Express : ரயிலில் தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி கஸ்தூரியின் பிரேத பரிசோதனையில் அவருக்கு 7 மாத ஆண் குழந்தை வயிற்றில் இருந்தது தெரியவந்தது. சென்னையில்…

13 mins ago

பட வாய்ப்புக்காக அப்படி பண்ணல! நடிகை ஐஸ்வர்யா மேனன் வேதனை!

Iswarya Menon : பட வாய்ப்புக்காக நான் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடவில்லை என நடிகை ஐஸ்வர்யா மேனன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் காதலில் சோதப்புவது யெப்படி, தீய…

44 mins ago

‘அவுட் இல்லனாலும் .. அது தோல்வி தான்’ ! டிஆர்எஸ் விதியை விமர்சித்த ஆகாஷ் சோப்ரா !

Akash Chopra : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், 1 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி, ஹைத்ராபாத்திடம் தோல்வியடைந்தது அதற்கு முக்கிய காரணமாக இந்த டிஆர்எஸ் அமைந்ததால்…

49 mins ago

தோல்வி பயத்தால் ரேபரேலியில் களமிறங்கும் ராகுல் காந்தி.! பிரதமர் மோடி விமர்சனம்.!

Election2024 : தோல்வி பயத்தில் ரேபரேலியில் ராகுல் போட்டியிடுகிறார் என பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் களத்தில் இன்று ஓர் முக்கிய நிகழ்வு அரங்கேறியது.…

1 hour ago

மகாராஷ்டிராவில் கட்டுப்பாட்டை இழந்த பிரச்சார ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது.!

Helicopter crash : மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் தரையிறங்கும் போது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா பெண் தலைவர் சுஷ்மா…

2 hours ago

ரேபரேலி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி.!

Election2024: ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலில் 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி…

2 hours ago