நான் தினகரனை சந்தித்தேன் …!எனக்கும் நோட்டீஸ் கொடுங்க …! சந்திக்க தயார் …!எம்எல்ஏ கருணாஸ் அதிரடி

தினகரனை சந்தித்ததற்காக எனக்கு சபாநாயகர் நோட்டீஸ் கொடுத்தால் அதை சட்டப்பூர்வமாக சந்திக்க தயார் என்று  கருணாஸ் தெரிவித்துள்ளார்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் (செப்டம்பர் 25 ஆம் தேதி)சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார் 3வது நீதிபதி சத்யநாராயணன்.மேலும் அதேபோல் 18 எம்.எல்.ஏக்களின் மனுக்களை தள்ளுபடி செய்தார் நீதிபதி சத்தியநாராயணன்.
இந்நிலையில் மதுரை தனியார் விடுதியில் டிடிவி தினகரனுடன் எம்எல்ஏ கருணாஸ்  சந்தித்தார்.டிடிவி-கருணாஸ் சந்திப்பின்போது தங்க தமிழ்ச்செல்வன், சாத்தூர் சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.
Image result for கருணாஸு தினகரன்
இதன் பின் எம்எல்ஏ கருணாஸ்  கூறுகையில், தினகரனை சந்தித்ததற்காக எனக்கு சபாநாயகர் நோட்டீஸ் கொடுத்தால் அதை சட்டப்பூர்வமாக சந்திக்க தயார்.
மேலும்  ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுகவில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. அதிமுகவில் தற்போது அணி, அணியாக பிரிகிறார்கள். அணி அணியாக சேருகிறார்கள் என்றும்  கருணாஸ் தெரிவித்துள்ளார்.
 

Leave a Comment