தனது மனைவிக்கு புற்றுநோய் சிகிச்சை அளிப்பதற்காக கும்பகோணம் டு புதுச்சேரி சைக்கிளில் அழைத்து சென்ற கணவர்.
கும்பகோணத்தை சேர்ந்த 65 வயதுடைய அறிவழகனின் மனைவி 60 வயதுடைய மஞ்சுளா புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு தனது மனைவியை அழைத்து செல்ல முடிவு செய்துள்ளார். தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பேருந்துகள் இயங்கவில்லை. மேலும் கார் மற்றும் தனியார் வாகனங்களில் செல்ல பணம் இல்லாததால் தனது மனைவியை சைக்கிளிலேயே புதுச்சேரிக்கு அழைத்து செல்ல அறிவழகன் முடிவெடுத்தார். எனவே தனது மனைவியை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சுமார் 150 கி.மீட்டர் இரவு முழுவதும் பயணம் செய்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்றார்.
இந்த தகவலை அறிந்த மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்த மருத்துவர்கள் 2 நாட்கள் அவர்களை அங்கே தங்க வைத்து அவரது மனைவி மஞ்சுளாவிற்கு சிகிச்சை அளித்தனர். பின்னர் தங்களின் சொந்த செலவில் அவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுத்துள்ளனர். சிகிச்சை முடிந்த பிறகு மனைவியை மீண்டும் சைக்கிளில் அழைத்து செல்ல தயாரான அறிவழகனுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. புதுச்சேரி மருத்துவமனையில் இருந்து அம்புலன்ஸ் ஏற்பாடு செய்து சைக்கிளோடு சேர்த்து அவர்களையும் ஏற்றி கும்பகோணத்திற்கு இலவசமாக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அறிவழகன் கூறுகையில், தனது மனைவிதான் எனக்கு எல்லாமே என்றும் அவள் இல்லாமல் நான் இல்லை என்று கூறியது மருத்துவர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை : நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்…
சென்னை: ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து 8 பேர்உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப்…
Plant-வீட்டிற்குள் எந்தெந்த செடிகளை வளர்க்கலாம் என்றும் அதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். தற்போது மாறி வரும் நவீன உலகில் காடுகள் ,வயல்வெளிகள் இருக்கும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி சென்னை அணியை வீழ்த்தி பிரம்மாண்ட வெற்றியை பெற்று பிளே ஆப் செல்லுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்து…
IPL2024: மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டைகள் இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இதனால் லக்னோ அணி18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
லாவோஸ், கம்போடியா ஆகிய நாட்டிற்கு செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை தேடி லாவோஸ் மற்றும் கம்போடியாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு…