பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய ’ராய்’ புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளது.
பிலிப்பைன்ஸின் தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் ‘ராய்’ என்ற சக்தி வாய்ந்த புயல் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தாக்கி, ஒரு பேரழிவை ஏற்படுத்தியது. மணிக்கு 121 கி.மீ. முதல் 168 கி.மீ. வரை சூறாவளிக் காற்று வீசியதால், அந்த நாட்டின் மத்திய மற்றும் தென்கிழக்கு தீவு மாகாணங்கள் பலத்த சேதமடைந்தன.
இந்த புயல் காரணமாக மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த பயங்கர புயலை அடுத்து மழை கொட்டித் தீர்த்தது. இதனால், ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.
இந்நிலையில் ராய் புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது என்று தேசிய காவல்துறை தெரிவித்துள்ளது. ராய் சூறாவளியால் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளை சேதப்படுத்தியதில் குறைந்தது 239 பேர் காயமடைந்தனர் மற்றும் 52 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
இது சமீபத்திய ஆண்டுகளில் நாட்டைத் தாக்கிய மிக மோசமான புயல்களில் ஒன்றாகும். ராய் புயல் நாட்டை தாக்கியதால் 300,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் கடற்கரையோர பகுதிகளை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.
சென்னை: 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 49…
சென்னை : கோட் படத்தின் VFX பணிகள் நிறைவடைந்துவிட்டதாக இயக்குனர் வெங்கட் பிரபு அறிவித்துள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நடிகர் விஜய்யை வைத்து கோட் படத்தினை…
சென்னை: தோல்வி பயத்தில் பாஜகவினர் தொடர்ந்து வீண்பழி சுமத்துகிறார்கள் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டிவருகிறது. 7 கட்ட தேர்தலில்…
சென்னை : நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்…
சென்னை: ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து 8 பேர்உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப்…
Plant-வீட்டிற்குள் எந்தெந்த செடிகளை வளர்க்கலாம் என்றும் அதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். தற்போது மாறி வரும் நவீன உலகில் காடுகள் ,வயல்வெளிகள் இருக்கும்…