வரலாற்றில் இன்று(14.02.2020)…அல் உம்மா அமைப்பு நிகழ்த்திய கொடூர கோவை குண்டு வெடிப்பு நிகழ்ந்த தினம் இன்று…

வரலாற்றில் இன்று கோயமுத்தூர் மாநகரை மட்டுமின்றி இந்தியாவையே புரட்டிப் போட்ட குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்த நாள் இன்று, இதன் காரணம்,   1997 ஆண்டு  நவம்பர் 29, இந்த நாளில்தான் போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அல் உம்மாவினர்தான் இந்த காரணம் எனத் தெரிய வந்தது. இதையடுத்து கோவையில் மிகப்பெரிய கலவரம் வெடித்தது. இதில், 17 முஸ்லீம்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர். அல் உம்மா அமைப்பின் தலைவர் எஸ்.ஏ.பாட்ஷா தாக்கப்பட்டார். இதற்குப் பழிக்கு பழிவாங்கும் வகையில், 1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை கோவை நகரை உலுக்கும் வகையில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடந்தன. மொத்தம் 19 குண்டுவெடிப்புகள் நடந்தன. 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 250க்கும்மேற்பட்டோர் காயமடைந்தனர். நாட்டையே திரும்பி பார்க்க செய்த  கோவை குண்டு வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து அல் உம்மா, அகில இந்திய அல் ஜிகாத் கமிட்டி ஆகியவற்றுக்குத் இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. கோவை நகரின் 24 இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. கோவை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சம்பவத்துக்குப் பிறகு மிக வேகமாக விசாரணை நடந்தது. 181 பேர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர். 177 பேரை பல மாவட்ட, மாநிலங்களில் இருந்து கைது செய்தனர். 4 பேர் தலைமறைவானார்கள். 7 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் அளவுக்கு விசாரணை வேகமாக நடைபெற்றது. இத்தகைய கொடூர தாக்குதல் தமிழகத்தில் நிகழ்ந்த தினம் வரலாற்றில் இன்று.

Kaliraj

Recent Posts

வீடு.. எருமை.. தாலி.., விரக்தியின் விளிம்பில் மோடி.! ராகுல் காந்தி காட்டம்.!

Rahul Gandhi : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் தோல்வியின் விளிம்பில் இருக்கிறார் பிரதமர் மோடி என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். மக்களவை தேர்தல் இரண்டு கட்டங்கள்…

22 mins ago

கோலி, சூர்யாவை விட ஹர்திக் தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்! முன்னாள் கிரிக்கெட் வீரர் பேச்சு!

Hardik Pandya : ஹர்திக் பாண்டியா உலகக்கோப்பை போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் என முகமது கைஃப்  தெரிவித்துள்ளார். 2024-ஆம் ஆண்டுக்கான டி 20 உலகக்கோப்பை போட்டி…

23 mins ago

ஐபிஎல்லில் இருந்து வெளியேறும் மயங்க் யாதவ் ? இது தான் காரணம் !

Mayank Yadav : லக்னோ அணியின் வேக பந்து வீச்சாளரன மயங்க் யாதவ் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்…

34 mins ago

28 வயதிலே இளம் இசையமைப்பாளர் மரணம்.! அதிர்ச்சியில் தமிழ் சினிமா…

RIP Praveenkumar: கோலிவுட் இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளரான பிரவீன்குமார்உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் காலாமானார். அவர் 28 வயதிலேயே…

45 mins ago

உடல் எடையை குறைக்க விபரீத பயிற்சி.! 6 வயது குழந்தை உயிரிழந்த சோகம்.!

America: அமெரிக்காவில் 6-வயது சிறுவன் உடல் பருமனாக இருந்ததால் டிரெட்மில்லில் ஓட வைத்து, சில நாட்கள் கழித்து உயிரிழந்த பரிதாப சம்பவம். அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரத்தில்…

1 hour ago

கல்குவாரியில் வெடி விபத்து – குவாரி நிர்வாகம் ரூ.12 லட்சம் நிவாரணம்!

Virudhunagar : விருதுநகர் மாவட்டம் ஆவியூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே…

1 hour ago