இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைப்பதற்கான இயற்கை வழிமுறைகள் சிலவற்றை நாம் இன்று அறிந்து கொள்வோம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு உயர் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது வழக்கம்தான். இந்த ரத்த சர்க்கரையின் அளவை எவ்வாறு குறைப்பது என்று தெரியாமல் ஆங்கில மருந்துகள் மற்றும் மாத்திரைகளை அதிகம் உட்கொண்டு நாளடைவில் அதன் மூலமாகவே மாற்று நோய்களையும் தேடி வைக்க கூடிய நிலை தற்பொழுது உருவாகிவிடுகிறது. மன அழுத்தம், தூக்கமின்மை, காலை உணவை தவிர்ப்பது, போதுமான தண்ணீர் குடிக்காதது ஆகியவைதான் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க காரணம் ஆகிறது. எனவே உடலில் ரத்தத்தில் இருந்து சர்க்கரையை உயிரணுக்களுக்கு சரியாக கொண்டு செல்ல முடியாத போதுதான் உயர் ரத்த சர்க்கரையாக மாறுகிறது. இதுதான் நீரழிவு நோய்க்கும் வழிவகுக்கிறது.
இந்நிலையில் நாம் இந்த ரத்த சர்க்கரை நோயை இயற்கையான முறையில் கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள், முதலாவது போதுமான தண்ணீர் குடித்து நன்றாக தூங்கி எழுந்து, காலை உணவை சரிவர உட்கொண்டால் இரத்த சர்க்கரையின் அளவு குறைந்துவிடும். அதுபோல தினமும் நடைப்பயிற்சி, ரன்னிங் மற்றும் நீச்சல் போன்ற உடற்பயிற்சிகளை செய்வதும் இரத்த சர்க்கரையின் அளவை குறைப்பதற்கு வழி வகுக்கும். மேலும் ஆரோக்கியமான எடையை பராமரித்து, முறையான உணவு பழக்கங்கள் வரவேண்டும். கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்த்து அதிகம் நார்ச்சத்துக்கள் கொண்ட உணவுகள் சாப்பிடுவதை அதிகரிக்கவேண்டும்.
ஒரு கிராம் அளவில் லவங்கப்பட்டை எடுத்துக்கொண்டு அதை உட்கொண்டு வரும் பொழுது இரத்த சர்க்கரை அளவு குறையும். முருங்கை இலைகளில் உள்ள நார்ச்சத்து காரணமாக ரத்த சர்க்கரை குறையும். எனவே அவித்தோ அல்லது உணவில் சேர்த்து நாம் முருங்கை இலைகளை சாப்பிடலாம். மேலும் நாவல் பழ விதைகள் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த பெரிதும் பங்காற்றுகிறது. மேலும் பாகற்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம், இதன் மூலம் ரத்த சர்க்கரை கட்டுப்படுத்தப்படுகிறது. வேப்பங்கொழுந்து, கருஞ்சீரகம் ஆகியவையும் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
Tech Mahindra: ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா நிறுவனம் இந்த ஆண்டு, 6000 இளைஞர்களை புதியதாக பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது. நாட்டின் ஐந்தாவது பெரிய தகவல்…
Election2024: இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் காலை 11 மணி வரை திரிபுராவில் அதிகபட்சமாக 36.42% வாக்குகள் பதிவாகியுள்ளது என தகவல். மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட…
Vijayakanth : வாட்ச் மேன் தூங்கிக்கொண்டு இருந்தபோது விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கேப்டன் விஜயகாந்த் சாப்பாடு போட்டு உதவி செய்வது பலருக்கும்…
VVPAT Case : 100% தேர்தல் ஒப்புகை சீட்டு சரிபார்ப்பு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்களை இதில் காணலாம். தேர்தல் வாக்குப்பதிவின் போது, EVM மிஷினில்…
China: சீனா தனக்கென சொந்தமாக உருவாக்கியுள்ள விண்வெளி நிலையத்திற்கு 3 விண்வெளி வீரர்களை 6 மாத பணிக்காக அனுப்பியுள்ளது. விண்வெளியில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக ரஷ்யா உட்பட உலக…
Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி…