குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் இந்த புளிப்பு- இனிப்பு சுவை கொண்ட பழம் என்றாலே அலாதி பிரியம். ஆரஞ்சு நிறத்தில் அதிக அளவில் பயன்களை கொண்ட பழமாக இது விளங்குகிறது.
தினமும் இந்த பழத்தை சாப்பிட்டு வருவதால் ஏராளமான மாற்றங்கள் நம் உடலில் ஏற்படும் என அண்மைய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இவற்றில் வைட்டமின் சி நிறைந்துள்ளமையே இதன் முழு பயனிற்கும் காரணம். இனி ஆரஞ்சை ஏன் தினமும் சாப்பிட்டு வர வேண்டும் என்பதற்கான காரணிகளை பார்ப்போம்.
வரலாறு
இந்த ஆரஞ்சு பழத்திற்கென்று ஒரு சிறப்புமிக்க வரலாறும் உள்ளது. இதை முதன்முதலில் 2500 கி.மு. கால கட்டத்தில் சீன நாட்டில் தான் அறுவடை செய்தனர். இதற்கு முன்னரே கொலம்பஸ் இந்த விதைகளை பனாமா மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளில் அறுவடை செய்தனர். பிறகு உலகம் முழுவதும் இதன் பயணம் தொடர்கிறது.
புற்றுநோய்
ஆரஞ்சை அன்றாடம் சாப்பிடுவதால் பெருங்குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், தோல் புற்றுநோய் ஆகியவற்றை ஏற்படத்தும் கூடிய அபாயம் குறையுமாம். நமது DNA – வில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதை சரி செய்து, இந்த வகையான புற்றுநோயில் இருந்து உங்களை காக்க கூடிய தன்மை இதற்கு உண்டாம்.
இரத்த அழுத்தம்
வைட்டமின் பி6 இதில் அதிகம் நிறைந்துள்ளதால் உடலில் இரத்த அழுத்தம் உண்டாகினால் எளிதில் குறைத்து விடும். இதிலுள்ள மெக்னீசியம் இரத்த ஓட்டத்தை சமமான அளவில் உறுப்புகளுக்கு உற்பத்தி செல்வதற்கு வழி செய்யும்.
கொலஸ்ட்ரால்
கனடா நாட்டில் செய்த ஆய்வின் படி, ஆரஞ்சு பழ தோலில் உள்ள Polymethoxylated Flavones உடலில் கூடி உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை கொண்டது என கண்டறிந்து உள்ளனர். இதை பல ஆய்வுகளில் இன்றளவும் பரிசோதித்து வருகின்றனர்.
சர்க்கரை அளவு
அன்றாடம் ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சேர்ந்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்க முடியுமாம். சர்க்கரை நோயாளிகளுக்கு இது அருமருந்தாக இருக்க கூடும் என ஆய்வுகள் சொல்கின்றன. மேலும், இன்சுலின் உற்பத்தியை சீராக வைத்து உடல் எடையையும் குறைக்குமாம்.
மலச்சிக்கல்
நார்சத்து ஆரஞ்சு பழத்தில் அதிக அளவில் இருப்பதால், தினசரி இதை சாப்பிட்டு வருவதால் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இயலும். கூடுதலாக செரிமான கோளாற்றை முழுமையாக நீக்க கூடிய தன்மையும் இதற்கு உண்டு.
இது போன்ற அனைத்து நன்மைகளும் உங்களுக்கு கிடைக்க தினசரி 1 ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டால் போதும்.
இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், குஜராத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோத இருந்தன. இந்த போட்டி தொடங்கியிருந்த போது மழை…
சென்னை : ஐபிஎல்லில் நடக்கவிருக்கும் பெங்களூரு-சென்னை போட்டிகளுக்க்கான டிக்கெட் எடுக்கும் முயற்சியில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ரூ.67,000 வரை இழந்துள்ளார். ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே-ஆப் சுற்றுக்கான…
சென்னை: பிஎம்டபிள்யு ரக புதிய மாடலான எம் 1000 XR மாடல் இந்தியாவில் 45 லட்ச ரூபாய்க்கு களமிறங்கியுள்ளது. பைக் பிரியர்களால் அதிக கவனம் ஈர்க்கும் அதிவேக…
Plank exersize-பிளாங்க் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இன்றைய தலைமுறையினர் அதிகம்…
சென்னை : தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து இளையராஜா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களை உரிமையை பெறாமல் எக்கோ மற்றும்…
சென்னை: எல்லை தாண்டி வந்து, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…