Hardik Pandya: ஹர்திக் பாண்டியா ஏமாற்றி ரூ.4.3 கோடி மோசடி செய்த அவரது சகோதரர் வைபவ் பாண்டியா கைது செய்யப்பட்டார்.
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியாவின் பெரியப்பா மகனான வைபவ் பாண்டியா பிசினஸில் மோசடி செய்ததால் மும்பை காவல்துறை கைது செய்தது. கடந்த 2021ம் ஆண்டு முதல் மும்பையில் ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியாவுடன் இணைந்து அவர்கள் சகோதரரான வைபவ் பாண்டியா பாலிமர் வியாபாரம் நிறுவனத்தை நடத்தி வந்தார்.
அதில், ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியா ஆகியோர் தலா 40% முதலீடும், வைபவ் பாண்டியா 20% முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், அந்நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறுப்பும் வைபவ் பாண்டியாவிடம் இருந்துள்ளது. இந்த நிலையில், மும்பை பொருளாதார குற்றப் பிரிவு காவல்துறையிடம் ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியா சார்பில் பரபரப்பான புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரில் ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியாவுக்கு தெரியாமல், வைபவ் பாண்டியா ஒரு தனி பாலிமர் நிறுவனத்தை தொடங்கி, எங்கள் மூவருக்குமான இருக்கும் நிறுவனத்தில் செய்ய வேண்டிய விற்பனையை அவரது சொந்த நிறுவனத்தின் பெயரில் செய்துள்ளார். அதேசமயம் அவரது 20% லிருந்து 33% ஆக மாற்றி இருக்கிறார்.
மேலும், எங்கள் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்து சுமார் ஒரு கோடியை தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றி இருப்பதாகவும், சுமார் ரூ.4.3 கோடி வரை வைபவ் பாண்டியா ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் வைபவ் பாண்டியாவை மும்பை காவல்துறை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…