கோயம்பேட்டில் தீப்பிடித்து எரிந்த அரசுப்பேருந்து ….!

கோயம்பேட்டில் அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது, பயணிகள் குறைவாக இருந்ததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பேருந்து கோயம்பேட்டில் வைத்து திடீரென தீ பிடித்து இருந்துள்ளது. முன்னதாக சாலையோரம் சென்ற மக்கள் பேருந்தில் இருந்து கரும்புகை வந்ததை ஓட்டுனருக்கு தெரிவித்துள்ளனர். இதனை சுதாரித்து கொண்ட பயணிகள் பேருந்தில் இருந்து உடனடியாக பேருந்திலிருந்து கீழே இறங்கியுள்ளனர்.

அதன் பின் பேருந்தில் மளமளவென்று தீ பேருந்தில் பரவியுள்ளது. பயணிகள் குறைவாக இருந்ததால், உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதிக்கு தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பனி நடைபெற்று வருகிறது. இந்த தீ விபத்துக்கான கரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.