விழுப்புரம் செஞ்சி சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று சந்தை நடைபெறும். இந்த சந்தையில் வேலூர், தர்மபுரி, ஆம்பூர், பெங்களூர், புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து பல வியாபாரிகள் இங்குள்ள சந்தையில் விற்கும் ஆடுகளை வாங்கி செல்வது வழக்கம்.
தற்போது பக்ரீத் பண்டிகை நெருங்கி கொண்டிருப்பதால் இந்த வாரச்சந்தையில் ஆடுகள் வாங்குவதற்கு பெங்களூர், சேலம், திருவண்ணாமலை, வேலுர், தருமபுரி, சென்னை போன்ற பல பகுதிகளிலிருந்து அதிகமான வியாபாரிகள் வந்துள்ளனர்.
அதேபோல் கிராமங்களிலிருந்து ஏராளமான ஆடுகளும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். இந்த சந்தையில் செம்மறி ஆடுகள் ரூ.3,000 முதல் ரூ.4,000 வரையும், கருப்பு ஆடுகள் ரூ.8,000 முதல் ரூ.15,000 வரையும் விற்கப்பட்டுள்ளது.
இதனால் ஒரேநாளில் உடனுக்குடன் ஆடுகள் விற்கப்பட்டதால் ரூ.6 கோடிக்கு சந்தையில் ஆடுகள் விற்பனையாகியுள்ளது. இதனால் கிராமப்புற விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
IPL2024: பஞ்சாப் அணி 18.5 ஓவரில் 5 விக்கெட் இழந்து 145 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும்,…
சென்னை : 2014, 2019, 2024 பொதுத்தேர்தல்களில் பிரதமர் மோடி வெளியிட்ட தேர்தல் பிரமாண பத்திர விவரங்களின்படி சொத்து விவரங்கள் தெரியவந்துள்ளன. இந்திய பொதுத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள்…
சென்னை : கோட் படத்திற்கு 150 கோடி தயாரிப்பு நிறுவனம் கேட்டதால் பிரபல ஓடிடி நிறுவனம் படத்தை வாங்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோலிவுட் திரையுலகில் மிகப்பெரிய…
சென்னை : இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சௌரவ் கங்குலி, ஆஸ்திரேலியா இளம் வீரரான ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்கு ஆதரவாக பேசி இருக்கிறார். இந்த 2024 ஆண்டின் ஐபிஎல்…
சென்னை: கனமழை எச்சரிக்கையால், அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்க 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் 19ம்…
Heat boils-சூட்டு கொப்பளங்கள் ஏன் வருகிறது என்றும் அதை சரி செய்யும் முறை பற்றியும் இப்பதிவில் காணலாம். சூட்டு கொப்புளம் வர காரணங்கள் : குளிர்காலத்தில் எப்படி…