கல்வி மற்றும் வாகனங்களுக்கு வங்கி கடன் வழங்குவது போன்று, நாட்டு மக்களின் அத்தியாவசிய அடிப்படை தேவையான பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவுக்கு தனிநபர் கடன் வழங்க வேண்டும்.
சமீப நாட்களாக மக்கள் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் பலரும் வேதனைக்குள்ளான நிலையில், தேனியில், ஒரு அமைப்பினை இளைஞர்கள், அல்லிநகரம் கனரா வங்கியில் மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில், ‘கொரோனா தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்த நடுத்தர,ஏழை எளிய மக்கள் வறுமையின் விளிம்பு நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு மீதான மத்திய, மாநில அரசுகளின் வரி உயர்வினால் மேற்கண்ட அடிப்படை பொருட்களின் விலை மாபெரும் உச்சத்தை தொட்டுள்ளது.
இந்த கடுமையான விலையேற்றத்தால், நடுத்தர ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். எனவே அவர்களின் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரதையும் மேம்படுத்த கல்வி மற்றும் வாகனங்களுக்கு வங்கி கடன் வழங்குவது போன்று, நாட்டு மக்களின் அத்தியாவசிய அடிப்படை தேவையான பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவுக்கு தனிநபர் கடன் வழங்க வேண்டும்.’ என தெரிவித்துள்ளனர். பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு வாங்க வங்கி கடன் கேட்ட இளைஞர்களின் இந்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Abhishek Sharma : உலக கோப்பைக்கு அபிஷேக் சர்மா சரிப்பட்டு வரமாட்டார் என யுவராஜ் சிங் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் அபிஷேக்…
Election2024:பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் கண்ணீர் சிந்துவார் என தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார் மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும்…
Election2024 : பீகாரில் பிரச்சாரம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, மீண்டும் காங்கிரசின் சொத்து பகிர்வு வாக்குறுதி பற்றி விமர்சனம் செய்துள்ளார். . 7 கட்டங்களாக நடைபெற்று வரும்…
Thalapathy 69 : விஜயின் 69 -வது படத்தை தான் இயக்கினால் இந்த பிரபலங்களை அவருடன் நடிக்க வைப்பேன் என இயக்குனர் நெல்சன் கூறியுள்ளார். நடிகர் விஜய்யின்…
Election2024: இன்று நடைபெற்று இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் வாக்கு பதிவாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில்…
Mathew Hayden : ஐபிஎல் தொடரில் மிகவும் ஆபத்தான வீரரான வெளிநாட்டு வீரர் ஒருவரை பற்றி மேத்யூ ஹைடன் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசி இருந்தார். ஐபிஎல் தொடர்…