திருமணம் செய்வதாக கூறி ரூ.80 லட்சம் மோசடி செய்ததாக நடிகர் ஆர்யா மீது புகாரளித்த ஜெர்மனி பெண்.!

நடிகர் ஆர்யா திருமணம் செய்வதாக கூறி ரூ.80 லட்சம் பணம் வாங்கி ஏமாற்றியதாக ஜெர்மனி பெண் புகாரளித்துள்ளார் .

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஆர்யா ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சியை நடத்தி தனக்கு பெண் தேடினார்‌.16 பெண்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியிலிருந்து தனக்கான பெண்ணை கண்டுபிடித்து திருமணம் செய்யாத ஆர்யா அதன் பின் நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் தற்போது ஜெர்மனி பெண் ஒருவர் ஆர்யா தன்னை திருமணம் செய்வதாக கூறி ரூ.80 லட்சம் பணம் வாங்கி ஏமாற்றியதாக புகார் அளித்துள்ளார்.இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணான விட்ஜா என்பவர் ஜெர்மனி நாட்டில் சுகாதார துறையில் பணிபுரிந்து வருகிறார்.இந்த புகார் குறித்து விட்ஜா கூறுகையில்,கொரோனா லாக்டவுனின் போது ஆர்யா தன்னிடம் படம் இல்லை என்றும்,பணத்திற்காக கஷ்டப்படுவதாகவும் கூறியதுடன் ,தன்னை அவர் விரும்புவதாகவும் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும் கூறினார். எனவே நான் அவருக்கு ரூ.70,40,000 பணத்தை கொடுத்ததாகவும் , ஆனால் அதன் பின் தன்னை திருமணம் செய்ய மறுத்ததுடன் பணத்தையும் திருப்பி கேட்ட போது பணத்தை திருப்பி தர மறுத்ததுடன் அவரது தாயார் தன்னை மோசமாக திட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே ஆன்லைன் வழியாக பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் அலுவலகங்களுக்கு புகார் அளித்ததுடன் ஆர்யா மோசடி செய்த ஆதாரங்களையும் , ஆர்யாவின் தாயாருக்கும் விட்ஜாவுக்கும் இடையே நடந்த வாக்குவாதங்களையும் ,பட பரிவர்த்தனை செய்த ஆதாரங்களையும் புகாருடன் விட்ஜா இணைத்துள்ளார் .விட்ஜா அளித்த புகார் குறித்து விசாரிக்கும்படி உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்

Recent Posts

பட வாய்ப்புக்காக அப்படி பண்ணல! நடிகை ஐஸ்வர்யா மேனன் வேதனை!

Iswarya Menon : பட வாய்ப்புக்காக நான் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடவில்லை என நடிகை ஐஸ்வர்யா மேனன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் காதலில் சோதப்புவது யெப்படி, தீய…

18 mins ago

‘அவுட் இல்லனாலும் .. அது தோல்வி தான்’ ! டிஆர்எஸ் விதியை விமர்சித்த ஆகாஷ் சோப்ரா !

Akash Chopra : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், 1 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி, ஹைத்ராபாத்திடம் தோல்வியடைந்தது அதற்கு முக்கிய காரணமாக இந்த டிஆர்எஸ் அமைந்ததால்…

23 mins ago

தோல்வி பயத்தால் ரேபரேலியில் களமிறங்கும் ராகுல் காந்தி.! பிரதமர் மோடி விமர்சனம்.!

Election2024 : தோல்வி பயத்தில் ரேபரேலியில் ராகுல் போட்டியிடுகிறார் என பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் களத்தில் இன்று ஓர் முக்கிய நிகழ்வு அரங்கேறியது.…

36 mins ago

மகாராஷ்டிராவில் கட்டுப்பாட்டை இழந்த பிரச்சார ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது.!

Helicopter crash : மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் தரையிறங்கும் போது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா பெண் தலைவர் சுஷ்மா…

1 hour ago

ரேபரேலி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி.!

Election2024: ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலில் 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி…

2 hours ago

சுவிட்சர்லாந்த்தில் அமலுக்கு வரும் புதிய சட்ட திருத்தம் ! புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக அடுத்த நடவடிக்கை!

Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…

2 hours ago