கருடன் : துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடந்த மே 31-ஆம் தேதி வெளியான “கருடன்” திரைப்படம் விமர்சன ரீதியாக பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக வசூலில் சக்கைப்போடு போட்டு வருகிறது. வெளியான நாளில் இருந்து படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு எந்த அளவிற்கு இருக்கிறது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். எங்கு பார்த்தாலும் கருடன் படம் பற்றி தான் மக்கள் பேசி வருகிறார்கள்.
அந்த அளவுக்கு படத்தில் சூரியின் நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்து இருக்கிறது. அத்துடன் படத்தின் கதையும் கிராமத்து ஸ்டைலில் இருக்கும் காரணத்தால் படத்தினை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு சென்று கொண்டு வருகிறார்கள். இதனால் நாளுக்கு நாள் படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பும், வசூலும் அதிகரித்து கொண்டு வருகிறது.
இந்நிலையில், படம் வெளியான மூன்று நாட்களில் உலகம் முழுவதும் எத்தனை கோடிகள் வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, கருடன் திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் உலகம் முழுவதும் 18 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் மொத்தமாக இதுவரை 17 கோடி வசூல் செய்து இருப்பதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மட்டும் வெளியான மூன்றே நாளில் 17 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்னுமே படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதன் காரணமாக வரும் நாட்களிலும் படத்தின் வசூல் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த திரைப்படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா,சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மிமீ கோபி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
UK தேர்தல்: புறக்கணிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கீர் ஸ்டார்மர் தனது முதல் உரையில் பேசினார். பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்…
Fenugreek tea-இன்றும் பலருக்கு காலை உணவாக இருப்பது டீ தான். அது மட்டுமல்லாமல் ட்ரெஸ்ஸில் இருந்து பலருக்கும் விடுதலை தருவதும் டீ தான் .இந்த பால் மற்றும்…
சுரேஷ் ரெய்னா : இந்திய அணியின் கிரிக்கெட் ஜெர்ஸி எண் '7' -க்கு பிசிசிஐ ஓய்வை அறிவித்தனர், அதே போல '45'& '18' என்ற ஜெர்ஸி எண்ணிற்கும்…
உத்தரபிரதேசம் : எதிர்பாராமல் நடக்கும் விபத்து சம்பவங்களில் சிலர் பலியாகும் செய்திகளை பார்த்தோம் என்றாலே நமக்கு வேதனையாகிவிடும். அப்படி தான் உத்தரபிரதேசம்ஹர்தோய் மாவட்டத்தில், பெட்ரோல் பங்கில் நின்று கொண்டிருந்த…
குஜராத் : குஜராத் அரசு, அம்மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்தியுள்ளது. முதல்வர் பூபேந்திர படேலின் அலுவலகத்தின்படி, ஏழாவது ஊதியக் குழுவின் கீழ்…
இந்திய கடற்படை 2024 : இந்தியக் கடற்படை (Indian Navy) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 10+2 (B.Tech) கேடட் நுழைவுத் திட்டம் (நிரந்தர கமிஷன்) பணியிடங்களுக்கான விரிவான…