IPL 2024 : கிரிக்கெட் ரசிகர்களால் எதிர்பார்க்க பட்ட ஐபிஎல் தொடரின் முதல் பாதி அட்டவணை வெளியாகி போட்டிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது, ஐபிஎல் தொடரின் 2-வது பாக அட்டவணையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் X தளத்தில் வெளியிட்டுள்ளது.
கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரின் முதல் அட்டவணை வெளியாகும் போதே பலவித சர்ச்சைகளுடன் தான் வெளியானது. இந்த ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலின் காரணமாக ஐபிஎல் தொடரின் முதல் பாதி போட்டிக்கான அட்டவணையை மட்டும் வெளியுடுவோம் என பிசிசிஐ தரப்பில் முதலில் கூறி இருந்தனர்.
பிசிசிஐ சொன்னது போல ஐபிஎல் தொடரின் முதல் பாதி போட்டிக்கான அட்டவணையை மட்டும் முதலில் வெளியிட்டது. அந்த அட்டவணையில் ஐபிஎல் போட்டிகள் மார்ச்-22 முதல், ஏப்ரல்-7 ம் தேதி வரை நடைபெறும் எனவும், இடைப்பட்ட நாட்களில் மொத்தம் 21 போட்டிகள் நடைபெறும் என அறிவித்திருந்தது. மீதம் நடைபெறும் போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ, நாடாளுமன்ற தேர்தல் தேதி வெளியான பிறகு அறிவிக்கும் என தெரிவித்திருந்தது.
தற்போது, ஐபிஎல் தொடரின் முழு அட்டவணையும் X தளத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியிட்டுள்ளது. மேலும், நடைபெற போகும் ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்தது போல அனைத்து போட்டிகளும் இந்தியாவில் தான் நடைபெறுகிறது. tதற்போது வெளியாகி உள்ள இரண்டாம் கட்ட அட்டவணையில் ஏப்ரல்-8 ம் தேதி தொடங்கப்பட்டு, மே-26ம் தேதி நிறைவடைகிறது. ஏப்ரல்-8 தேதி போட்டியாக சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணி போட்டியில் விளையாட உள்ளனர்.
குவாலிபயர்-1 மற்றும் எலிமினேட்டர் போட்டி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திலும், குவாலிபயர் -2 மற்றும் இறுதி போட்டியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் நடைபெற உள்ளது. தோனியின் மிகப்பெரிய ஆசை தனது கிரிக்கெட் கேரியரின் கடைசி போட்டியை (ஃபேர்வெல்) சென்னையில் விளையாட வேண்டும் என்பது தான்.
தோனிக்கு இது வரை ஒரு நல்ல ஃபேர்வெல் போட்டி அமையாத காரணத்தால், சிஎஸ்கே ரசிகர்கள் இந்த இறுதிபோட்டிக்கு சென்னை அணி வந்து கோப்பையை வென்று அந்த வெற்றியை ‘தல’ தோனிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சிஎஸ்கே ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். இதை சென்னை அணியின் புதிய கேப்டனான ருதுராஜ்ஜூம், சென்னை அணி வீரர்களும் செய்வார்களா என்று பொறுத்து இருந்து பாப்போம்.
சென்னை : ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ஈரான் அதிபர் ரைசியின் மரணத்துக்கு உலக நாடுகளின் பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வந்தனர். அதே நேரத்தில் ஈரானில் ஒரு…
சென்னை : தமிழ்நாட்டில் கனமழை காரணமாக கடந்த 5 நாளில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், தொடர்…
சென்னை: திரவ நைட்ரஜன் கலந்த பானை சாப்பிட்ட 12 வயது சிறுமி வயிற்றில் ஓட்டை விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் திரவ நைட்ரஜன் கலந்த பான்…
சென்னை : ஐபிஎல் தொடரில் பிளேஆப் சுற்றில் நடைபெறும் போட்டிக்கு ரிசர்வ் நாள் உள்ளதா, அதை பற்றி ஐபிஎல் விதிகள் என்ன சொல்கிறது என்பதை பற்றி தற்போது…
சென்னை : பழைய பேருந்துகளை பழுதுபார்க்க வேண்டும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக புதிய பேருந்துகளை…
சென்னை: கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி…