தஞ்சையில் அண்மையில் மறைந்த முன்னாள் திமுக அமைச்சர் உபயதுல்லா வீட்டிற்கு நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறியுள்ளார்.
கடந்த 19ஆம் தேதி தஞ்சையில் திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 84. அவர் மறைவுக்கு பல அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர் . திமுக சார்பில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி இருந்தனர்.
நேரில் ஆறுதல் : இந்நிலையில், இன்று மற்றும் நாளை 2 நாள் பயணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் சென்றுள்ளார். விமானம் மூலம் திருச்சி வந்த முதல்வர் அங்கிருந்து திருவாரூர் செல்லும் வழியிவ் தஞ்சையில் மேரிஷ்கர்னார் பகுதியில் கல்லுக்குளம் சாலையில் உள்ள மறைந்த உபயதுல்லா வீட்டிற்கு நேரில் சென்றுள்ளார். அங்கு, உபயதுல்லா குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல் கூறியுள்ளார்.
திருவாரூர் பயணம் : இதனை அடுத்து, திருவாரூரில் கட்டப்பட்டு வரும் கலைஞர் அருங்காட்சியகம், மணிமண்டபம் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, நாளை திருவாரூரில் கட்சி நிர்வாகி ஒருவரின் திருமண நிகழ்வில் முதலவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான தல தோனி தற்போது துபாய் ஐ 103.8 என்ற தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று…
சென்னை : இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரரான சுமித் நாகல் நடைபெற்று வரும் ஜெனிவா ஓபன் டென்னஸி தொடரின் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியுள்ளார். மண் தரையில்…
சென்னை: சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'கொட்டுக்காளி' படம் டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட தேர்வாகியுள்ளது. ஜூன் 14-24 தேதிகளுக்கு இடையில் ருமேனியாவில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில்…
சென்னை: 4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அகமதாபாத்தில் கைது செய்யப்பட்டது குறித்து குஜராத் டிஜிபி செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார். குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ்…
சென்னை : அமிர்தா ஐயர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பலரும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை…
சென்னை : நடைபெற்று வரும் 5-ம் கட்ட வாக்குப்பதிவில் தற்போது மாலை 5 மணி வரையில் 61.90% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 5-ம் கட்ட மக்களவை தேர்தல்…