பைக் ஷோரூமில் தீ விபத்து.! 400 பைக்குகள் தீயில் கருகி நாசம்.!

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள பைக் ஷோரூமில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்பிறகு தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இது குறித்து கூறிய மாவட்ட தீயணைப்பு அலுவலர் சங்கராவ், “நாங்கள் சென்றடைந்தபோது, ஷோரூம் முழுவதும் புகையில் மூழ்கியது. ஒன்றரை மணி நேரத்தில் தீயை கட்டுப்படுத்தினோம்”

“தீ விபத்துக்கான சரியான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஷோரூமில் 1000 பைக்குகளில் 400-500 வாகனங்கள் தீயில் கருகின” என்று கூறினார்.