பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் மரணம்..! சோகத்தில் ரசிகர்கள்…!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவுடன் காணப்பட்ட நிலையில், இன்று  காலமானார்.இவரது மறைவு கிரிக்கெட் ரசிகர்களை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி இந்திய  அணிக்காக 1967 முதல் 1979ம் ஆண்டு வரையில் 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்திய அணியின் சுழல் ஜாம்பவான்களின் முன்னோடியாக பிஷன்சிங் பேடி திகழ்கிறார்.

இவர் இந்திய அணிக்காக இதுவரை 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவருக்கு 1970ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது. அதேபோல், கடந்த 2004ம் ஆண்டு சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

இவரது மறைவு கிரிக்கெட் வீர்ரகள் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழத்தியுள்ள நிலையில், இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.