இன்று நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றுள்ளது.
இன்றைய போட்டியில் இங்கிலாந்து Vs பங்களாதேஷ் அணிகள் மோதியது. இப்போட்டியானது கார்டிஃப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்து வீச முடிவு செய்தது.
இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 386 ரன்கள் குவித்தது.பங்களாதேஷ் அணி பந்து வீச்சில் முகம்மது சைஃபுடின்,மெஹீடி ஹசன் தலா 2 விக்கெட்டை பறித்தனர்.இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜேசன் ராய் 153 ரன்கள், ஜானி பைர்ஸ்டோவ் 51 ரன்கள் அடித்தனர்.இதன் பின் 387 ரன்கள் இலக்குடன் பங்களாதேஷ் அணி களமிறங்கியது.
பங்களாதேஷ் அணியில் தொடக்க வீரர்கள் சரியான தொடக்கத்தை தரவில்லை.இக்பால் 19 ரன்கள்,சர்கார் 2 ரன்களில் வெளியேறினார்கள்.இதன் பின்னர் ஷாகிப் மற்றும் முஸ்பிகூர் ஜோடி சேர்ந்தனர்.இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது.ஆனால் முஸ்பிகூர் 44 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.பொறுப்புடன் விளையாடிய ஷாகிப் சதம் அடித்தார்.பின் 121 ரன்னில் ஷாகிப் வெளியேறினார்.இதன் பின் வந்தவர்கள் சிறப்பாக ஆடத் தவறினார்கள்.
இறுதியாக பங்களாதேஷ் அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 280 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வி அடைந்தது.இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ஸ்டோக்ஸ்,ஆர்ச்சர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.பங்களாதேஷ் அணியில் அதிகபட்சமாக ஷாகிப் 121 ரன்கள் அடித்தார்.இதன் மூலம் இங்கிலாந்து அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான தல தோனி தற்போது துபாய் ஐ 103.8 என்ற தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று…
சென்னை : இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரரான சுமித் நாகல் நடைபெற்று வரும் ஜெனிவா ஓபன் டென்னஸி தொடரின் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியுள்ளார். மண் தரையில்…
சென்னை: சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'கொட்டுக்காளி' படம் டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட தேர்வாகியுள்ளது. ஜூன் 14-24 தேதிகளுக்கு இடையில் ருமேனியாவில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில்…
சென்னை: 4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அகமதாபாத்தில் கைது செய்யப்பட்டது குறித்து குஜராத் டிஜிபி செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார். குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ்…
சென்னை : அமிர்தா ஐயர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பலரும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை…
சென்னை : நடைபெற்று வரும் 5-ம் கட்ட வாக்குப்பதிவில் தற்போது மாலை 5 மணி வரையில் 61.90% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 5-ம் கட்ட மக்களவை தேர்தல்…