இ – சஞ்சீவனி திட்டத்தின் மூலம் இதுவரை 10 கோடி பேர் பயனடைந்துள்ளதாக பிரதமர் பெருமிதம்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு மாதாந்திர மனதின் குரல் நிகழ்ச்சியான மன் கி பாத்தின் 98வது பதிப்பில் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும், இதன் மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாடுகிறார். இந்த மன் கி பாத் என்கின்ற மனதின் குரலின் முதல் நிகழ்ச்சி 3 அக்டோபர் 2014 அன்று ஒளிபரப்பப்பட்டது.
பிரதமர் மோடி உரை:
அப்போது பேசிய பிரதமர் மோடி, மன் கி பாத் மக்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான ஊடகமாக மாறியுள்ளது. சுகாதாரத்துறை இ – சஞ்சீவனி திட்டம் டிஜிட்டல் இந்தியாவில் முக்கிய மைல் கல்லை எட்டியுள்ளது. இ – சஞ்சீவனி திட்டத்தின் மூலம் இதுவரை 10 கோடி பேர் பயனடைந்துள்ளனர். ஏழை மக்களுக்கு உயிர்காக்கும் செயலியாக இ – சஞ்சீவனி மாறியுள்ளது.
இ – சஞ்சீவனி செயலி:
கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில், இசஞ்சீவனி செயலி மக்களுக்கு ஒரு பெரிய வரமாக இருந்தது. இ-சஞ்சீவனி செயலியானது மருத்துவர்களுடன் தொலை ஆலோசனையில் உதவுகிறது. இந்த செயலியைப் பயன்படுத்திய மருத்துவர்களையும் மக்களையும் வாழ்த்துகிறேன். தொற்றுநோய் காலத்தில் இது நிறைய உதவியது. இமயமலைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் இந்த செயலி ஒரு பயனுள்ள கருவியாக உள்ளது.
டிஜிட்டல் இந்தியா:
மக்கள் உறுதியாக இருந்தால் இந்தியாவை நிச்சயம் தூய்மைப்படுத்த முடியும். ஒவ்வொரு மக்களும் பிளாஸ்டிக் பைகளை மாற்றி துணி பைகளை பயன்படுத்த வேண்டும். UPI (ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம்) அமைப்பு மற்றும் இ-சஞ்சீவனி செயலி ஆகியவை டிஜிட்டல் இந்தியாவின் சக்திக்கு சிறந்த எடுத்துக்காட்டு. உலகின் பல நாடுகள் இந்தியாவின் யுபிஐக்கு ஈர்க்கப்படுவதாக கூறினார்.
UPI-Pay இணைப்பு:
இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே சமீபத்தில் தொடங்கப்பட்ட UPI-Pay இணைப்பு பற்றி அவர் பேசினார். இப்போது, சிங்கப்பூர் மற்றும் இந்திய மக்கள் அந்தந்த நாடுகளில் உள்ளதைப் போலவே தங்கள் மொபைல் போன்களிலிருந்து பணத்தைப் பரிமாற்றுகிறார்கள் என்றார். இந்திய பொம்மைகளுக்கு வெளிநாடுகளிலும் கிராக்கி அதிகமாகிவிட்டதால், தற்போது வெளிநாடுகளிலும் இந்திய பொம்மைகளின் தேவை அதிகரித்து விட்டது எனவும் குறிப்பிட்டார்.
IPL2024: சென்னை அணி 18.2 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 145 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை…
Miami Beach Police: ரோந்து பணிக்காக விலையுர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை மியாமி பீச் போலீஸ் அறிமுகப்படுத்துகிறது அமெரிக்காவில் சொகுசு கார்களை பார்ப்பது வழக்கமான ஒன்றாகும். ஆனால்,…
Weather Update: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல…
Ma Subramanian : கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்கள் பயத்துடனே வாழ வேண்டும் என்ற அவசியமில்லை என அமைச்சர் மா.சுப்பிமணியன் கூறியுள்ளார். சமீபத்தில், உலகம் முழுவதும் கோவிஷீல்டு கொரோனா…
Actor Surya : நடிகர் சூர்யா தமிழ்நாடு முழுவதும் நற்பணி இயக்கத்தை வலுப்படுத்த முடிவெடுத்துள்ளார். தமிழ் சினிமாவின் உட்ச நட்சத்திரமாக திகழும், நடிகர் விஜய் இப்பொது கமிட்டாகி…
MothersDay2024 : ஆண்டுதோறும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை இன்று (மே 12) அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய நந்நாளில் பலர் தங்களது அம்மாவிற்கு தங்களது வாழ்த்துக்களை…