72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் டாக்டர் வி.சாந்தாவின் உடல் தகனம்!

டாக்டர் வி.சாந்தாவின் உடலுக்கு அரசு மற்றும் காவல் துறை மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டப்பின், உடல் தகனம் செய்யப்பட்டது.

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவரும், சமூக சேவகருமான டாக்டர் வி.சாந்தா அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். 93 வயது உடைய இவரது வாழ்நாள் பலருக்கும் வாழ்வளித்த ஒன்றாக இருந்துள்ளது. சாந்தாவின் மறைவிற்கு முதல்வர், துணை முதல்வர், பிரதமர், பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர்.

மேலும், மருத்துவர் சாந்தாவின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரின் இறுதி சடங்குகளின் போது காவல்துறை மரியாதை அளிக்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அவரின் உடல், பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அங்கு அவரின் உடலுக்கு அரசு மற்றும் காவல் துறை மரியாதையுடன் 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டப்பின், மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது. டாக்டர் வி.சாந்தாவின் இறுதி விழாவில் பொதுமக்கள், மருத்துவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Recent Posts

பட வாய்ப்புக்காக அப்படி பண்ணல! நடிகை ஐஸ்வர்யா மேனன் வேதனை!

Iswarya Menon : பட வாய்ப்புக்காக நான் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடவில்லை என நடிகை ஐஸ்வர்யா மேனன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் காதலில் சோதப்புவது யெப்படி, தீய…

10 mins ago

‘அவுட் இல்லனாலும் .. அது தோல்வி தான்’ ! டிஆர்எஸ் விதியை விமர்சித்த ஆகாஷ் சோப்ரா !

Akash Chopra : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், 1 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி, ஹைத்ராபாத்திடம் தோல்வியடைந்தது அதற்கு முக்கிய காரணமாக இந்த டிஆர்எஸ் அமைந்ததால்…

15 mins ago

தோல்வி பயத்தால் ரேபரேலியில் களமிறங்கும் ராகுல் காந்தி.! பிரதமர் மோடி விமர்சனம்.!

Election2024 : தோல்வி பயத்தில் ரேபரேலியில் ராகுல் போட்டியிடுகிறார் என பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் களத்தில் இன்று ஓர் முக்கிய நிகழ்வு அரங்கேறியது.…

28 mins ago

மகாராஷ்டிராவில் கட்டுப்பாட்டை இழந்த பிரச்சார ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது.!

Helicopter crash : மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் தரையிறங்கும் போது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா பெண் தலைவர் சுஷ்மா…

1 hour ago

ரேபரேலி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி.!

Election2024: ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலில் 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி…

1 hour ago

சுவிட்சர்லாந்த்தில் அமலுக்கு வரும் புதிய சட்ட திருத்தம் ! புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக அடுத்த நடவடிக்கை!

Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…

2 hours ago