மறந்து கூட இதை அதிகமா சாப்பிட்டுறாதீங்க…!

சீரகத்தை அதிகமாக சாப்பிடுவதால் என்னென்ன தீமைகள் ஏற்படுகிறது என்பது பற்றி பார்ப்போம்.

நாம் அதிகமாக சீரகத்தில் பல நன்மைகள் உள்ளது என்று தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இந்த சீரகத்தில், எவ்வளவு நன்மைகள் உள்ளதோ  அந்த அளவுக்கு தீமைகளும் உள்ளது. தற்போது இந்த பதிவில் சீரகத்தை அதிகமாக சாப்பிடுவதால் என்னென்ன தீமைகள் ஏற்படுகிறது என்பது பற்றி பார்ப்போம்.

பொதுவாகவே காரமான உணவுகள் அனைத்துமே சீரகத்தை பயன்படுத்தாமல்  தயாரிக்கப்படுவதில்லை. ஏனென்றால் சீரகத்தில் ஜீரண சக்தியை அதிகப்படுத்த கூடிய தன்மை உள்ளது. மேலும் நச்சுத்தன்மையை வெளியேற்றி வாயு பிரச்சனையை குறைகிறது. பொதுவாகவே அதிகமானோர் சீரகத் தண்ணீர் அதிகமாக குடிப்பதுண்டு. ஆனால், இது தவறல்ல. ஆனால் உடல் நோயை முன்வைத்து சீரகத் தண்ணீர் குடிப்பது தவறான ஒன்றாகும். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இவ்வாறு செய்வது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

சீரகத்தை அதிகமாக சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது உண்டு. அதிகமாக அசிடிட்டி உள்ளவர்கள் சீரகத்தை சாப்பிட்டால் இவ்வாறு பிரச்சனைகள் ஏற்படும். எனவே அளவோடு பயன்படுத்துவது நல்லது. அடிக்கடி சீரகம் சாப்பிடுபவர்கள்,  சீரகத்தை சாதாரணமாகவே வைத்து சாப்பிடுபவர்களுக்கு கல்லீரல் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. இதில் உள்ள எண்ணெய் மிக எளிதில் ஆவியாகும். எனவே கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.

கர்ப்பிணிப் பெண்கள் சீரகத்தை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் இதனால் குறைப்பிரசவம் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே சீரகம் அதிகமாக சாப்பிடும் போது குமட்டல், வாந்தி போன்ற பிரச்சினைகளும் ஏற்படும். மாதவிடாய் காலங்களில் அதிக அளவு சீரகத்தை எடுத்துக் கொண்டால், அதிக அளவு இரத்தப் போக்கை ஏற்படுத்தும்.

எனவே இந்த சமயத்தில் சீரகத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது. சீரகம் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. ஆனால்  சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துள்ளவர்கள், சீரகத்தை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சீரகத்தை அளவோடு சாப்பிடும் போது, நமது உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு நமது ஆயுளும் நீடிக்கும்.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

பாரம்பரியமிக்க பானக்கத்தின் ஆச்சரியமூட்டும் நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க.!

பானக்கம் -பானகத்தின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் செய்முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். பானக்கத்தின் நன்மைகள்: பொதுவாக பங்குனி சித்திரை மாதங்களில் தான்  நம் ஊர்களில் திருவிழாக்கள்,…

36 mins ago

‘ஹாய் காய்ஸ் நான் உங்கள் தோனி’ .. தோனி பெயரில் மோசடி செய்ய முயற்சி!

Online Scam : சமூகத்தளத்தில் தோனியின் பெயரை பயன்படுத்தி ரூ.600 வரை மோசடி செய்ய முயற்சி. இன்றைய நாட்களில் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், X  தளம் என்ற டிஜிட்டல் தளங்களில்…

1 hour ago

இந்த அடி பத்தாது கண்ணா! ரஜத் படிதாருக்கு அட்வைஸ் செய்த அஜய் ஜடேஜா!

Rajat Patidar : ஹைதராபாத் அணிக்கு எதிராக ரஜத் படிதார்  ஆட்டம் பற்றி அஜய் ஜடேஜா புகழ்ந்து பேசியுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும்,…

1 hour ago

புதுச்சேரியில் ஜூன் 6 பள்ளிகள் திறப்பு…தமிழகத்தில் எப்போது.? குழப்பத்தில் மாணவர்கள்.!

Schools Reopen: புதுச்சேரி மாநிலத்தில் ஜுன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வரும் 29-ம் தேதி முதல்,…

1 hour ago

தெலுங்கானாவில் 11,12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.! 7 மாணவர்கள் தற்கொலை.!

Student Suicide : தெலுங்கானாவில் பள்ளி தேர்வில் தோல்வியடைந்ததால் இதுவரை 7 மாணவ மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தெலுங்கானா பள்ளி கல்வி வாரியம் நடத்தும் 11 மற்றும்…

1 hour ago

ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகிய ஸ்ரீசங்கர் !! நீளம் தாண்டும் பதக்கம் கேள்வி குறி?

Olympic 2024 : இந்தியாவை சேர்ந்த நீளம் தாண்டும் தடகள வீரரான ஸ்ரீசங்கர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகி உள்ளார். இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய…

2 hours ago